புதுதில்லி, டாக்கா,ஆக.6- வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியுள் ளார். இந்நிலையில் ‘வங்கதேசத் தின் அரசியல் சூழல்’ குறித்தும், அதில் ‘இந்தியாவின் நிலைப்பாடு என்ன?’ எனவும் இந்திய வெளியுற வுத்துறை அமைச்சர் எஸ். ஜெய் சங்கர் செவ்வாயன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் விளக்கம் அளித்துள் ளார். பின்னர் மாநிலங்களவை யிலும், பின் மக்களவையிலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் அவர் கூறிய அம்சங்களாவது, வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. வங்க தேச ராணுவத்துடனும் வெளியுற வுத்துறை தொடர்பில் உள்ளது. அந்நாட்டின் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக பிரதமர் பதவி யை ராஜினாமா செய்துள்ள ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கி யுள்ளார்.
ஷேக் ஹசீனா இந்தியா வந்து இன்னும் 24 மணிநேரம் கூட ஆக வில்லை. அவர் இன்னும் அதிர்ச்சி யில் உள்ளார். அவருடைய அடுத்த பயணத் திட்டம் என்ன? என்ன செய்யப்போகிறார்? என்பது உட்பட பல்வேறு விவரங்கள் குறித்து அவ ருடன் விவாதிக்க வேண்டி யுள்ளது. ஆனால் அதற்கு முன் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கால அவகாசம் கொடுக்க வேண்டியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து வங்கதேச ராணு வத்திடம் வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே 8 ஆயிரம் மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். தற்போது அங்கு இருக்கக்கூடிய மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள சிறு பான்மையினரின் வீடுகள் மற்றும் சொத்துகள் முதலானவை போராட் டக்காரர்களால் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றன. இது குறித்தும் நாங்கள் கவலைகளை வெளிப் படுத்தியுள்ளோம்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றி ருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், வங்கதேசக் கலவரத்தில் வெளிநாடு களின் சதி உள்ளதா, “வங்கதேச அர சியல் சூழலையொட்டி அந்நாட்டுட னான இந்தியாவின் நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டம் என்ன?” என்று எழுப்பிய கேள்வி களுக்கு, அது குறித்து இந்திய அரசு ஆய்வு செய்து வருவதாக வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் பதிலளித்துள்ளார்.
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு
இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. ஹசீனா பதவி விலகியதை தொடர்ந்து அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க உதவும் என ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தாக வங்கதேச ஜனாதிபதி ஷஹா புதீன் அறிவித்துள்ளார்.
“மிக மோசமாக இருந்த வங்கதேசத்தை ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு ஆசியாவில் முக்கியமான நாடாக மாற்றினர். எனினும் அவருக்கு எதிராக நடந்த இந்த கலவரங்கள், சூழ்ச்சியைக் கண்டு அவர் மிகவும் ஏமாற்றமடைந் துள்ளார். இனி அவர் அரசியலுக்கு திரும்ப மாட்டார் என அவரது முன் னாள் ஆலோசகரும் மகனுமான சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள் ளார்.
ஆலோசகராகும் முஹம்மது யூனுஸ்
வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்த தாகவும், அதனை முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரி வித்துள்ளார். தற்போது யூனுஸ் மருத்துவ சிகிச்சைக்காக பிரான்சில் இருப்பதாகவும் சிகிச்சை முடிந்த வுடன் வங்கதேசம் திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீவிர மதவாத பிற்போக்கு வாதியான எதிர்க்கட்சித் தலைவர் கலிதா ஜியா வீட்டுச் சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கே செல்வார் ஷேக் ஹசீனா ?
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, தற்சமயம் இந்தி யாவில் தங்கியுள்ளார். இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாம்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கதேசத்தில் நிலவும் மோசமான சூழல் குறித்து ஐ.நா. தலைமையிலான முழுமை யான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அதில் ஷேக் ஹசீனா இங்கிலாந்து வரு கிறாரா, இங்கிலாந்து அவருக்கு அடைக்கலம் கொடுக்க உள்ளதா என எதையும் குறிப்பிடவில்லை.
இங்கிலாந்து அரசு தரவுகள் மற்றும் அதிகாரிகள் கொடுத்துள்ள தகவலின் படி பாதுகாப்பு தேவைப் படும் நபர்களுக்கு இங்கிலாந்து அடைக்கலம் வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; ஆனால் தற்காலிக அடைக்கலம் மட்டும் பெறுவதற்கு எந்த வழிகளும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச புகலிட நடைமுறை கள் படி, சர்வதேச அளவில் பாது காப்பு மற்றும் அடைக்கலம் தேடுபவர் கள் அவர்கள் செல்லும் முதல் நாட்டி லேயே தஞ்சம் கோர வேண்டும் என்று கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடைக்கலத்திற்கான தெளி வான பதில் இல்லாத காரணத்தால் ஷேக் ஹசீனா சில நாட்களுக்கு இந்தியாவில் தங்கவேண்டிய சூழல் ஏற்படக்கூடும் எனத் தெரிய வருகிறது.