india

img

தில்லி: 10, 12 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு! - உச்சநீதிமன்றம் உத்தரவு

தில்லியில் காற்று மாசு அபாய நிலையை எட்டியுள்ள நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அபாய நிலைக்கு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தம், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் தில்லி அரசு உத்தரவிட்டது. மேலும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் தில்லியில் நுழைய தடை விதிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டும் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழலில், 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த தடை விதித்து, ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காற்றின் தரக் குறியீடு 450 புள்ளிகளுக்கு கீழ் சென்றாலும், அடுத்த விசாரணை வரும் வரை கிரேப்-4 கட்டுபாடுகள் கடுமையாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.