india

img

5 ஆண்டுகளில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை - எஸ்.பி.ஐ தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15-ஆம் தேதி வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை; 22,030 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றியுள்ளது; 187 தேர்தல் பத்திரங்களை 15 நாட்களுக்குள் பணமாக மாற்றப்படாததால், அந்த நிதி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் வாங்கியவரின் பெயர், தேதி, அதன் மதிப்பு மற்றும் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றிய தேதி உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளதாக எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.