india

img

நாடு தழுவிய போராட்டங்களால் எழுந்த நெருக்கடி

நாட்டு மக்களின் பொருளா தாரம், கல்வி உள்ளிட்ட படி நிலைகளை கண்டறிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு  முழுவதும் சாதிவாரி கணக்கெ டுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்நிலை யில், “இந்தியா” கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முன்பு எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு விவரத்தை காங்கிரஸ் ஆளும் கர்நாடகா அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஆந்திர அரசு கணக்கெடுப்பு வேலையை தொடங்கியுள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக அரசு சாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிர்மறை யாகவே கருத்து தெரிவித்து வரு கிறது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரி கணக்கெ டுப்பை மேற்கொள்ளும்போது அது எந்தவிதத்திலும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக பல்வேறு வரலாற்றுக் கார ணங்களால் பல சமூகங்கள் பொரு ளாதாரம், கல்வி எனப் பல படி நிலைகளில் பின்தங்கிவிட்டன. அத னால் சாதிவாரி கணக்கெடுப்பின் போது எல்லா அரசியல் கட்சிகளும் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே நாங்கள்  வலியுறுத்துகிறோம். மற்றபடி நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை” எனக் கூறப் பட்டுள்ளது.

முரண்பட்ட கருத்து
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான ஸ்ரீதர் கட்கே,”சாதிவாரி கணக் கெடுப்பு சிலருக்கு அரசியல் ரீதியாக ஆதாயம் அளிக்கலாம். சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அரசியல் கட்சிகளால் தங்களுக்கு சாதகமான வாக்குவங்கி என்னவென்பதைத் தெரிந்துகொள்ள இயலும். அத னால் சாதிவாரி கணக்கெடுப்பு சமூ கத்துக்கோ, தேசிய ஒருமைப் பாட்டுக்கோ எவ்வித நன்மையும் பயக்காது” எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இவரது கருத்திற்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊடகப் பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் முரண்பட்ட வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மட்டு மின்றி, அதை பற்றி பேசவே ஒன்றிய பாஜக அரசு தவிர்த்து வரும் நிலை யில், அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சாதிவாரி கணக் கெடுப்புக்கு ஆதரவாகவும், எதி ராகவும் என இரண்டுவிதமாக முரண்பட்ட கருத்துக்களை கூறி இருப்பதால் பாஜக என்ன செய்யப் போகிறது என தெரியவில்லை. தேர்தல் காலம் என்பதால் இவ்வாறு சமாளிக்கிறார்கள்.