நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழனன்று போராட்டம் நடத்தப்பட்டது.
நடப்பாண்டு 1.75 லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனிதப் பயணம் (சவூதி அரேபியா - மெக்கா) சென்றுள்ள நிலையில், அவர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி 18ஆவது மக்களவை சபாநாயகராக போட்டி யிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நடை பெறவுள்ள மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ள இந்திய தேர்தல் ஆணையம், இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தொடங்கி உள்ளது.
புதுதில்லி
கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேரில் 700 பேர் தேர்ச்சி பெறவில்லை
ஒன்றிய அரசு தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலை யில், முறைகேட்டின் முக்கிய கருப் பொருளான கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப் பட்டது. இந்நிலையில், இந்த மனுநீதிபதி விக்ரம்நாத் அமர்வு முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்,“மறுத்தேர்வு எழுத உள்ள (கருணை மதிப்பெண் பெற்ற) 1,563 மாணவர்க ளில் 700பேர் ஏற்கனவே எழுதிய தேர்வில் தோல்வியடைந்தவர்கள். அவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. எனவே இவ்விசயத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். நீட்தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும்” என்று கோரப்பட்டது.
இவ்விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை, ஒன்றிய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த உச்சநீதிமன்றம், விசாரணையை ஜூலை 8-க்கு ஒத்தி வைத்தது.
புதுதில்லி
கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி
வைத்த தில்லி உயர்நீதிமன்றம்
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக் கப்பட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவ ரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறை யில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள் ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமீன் முடிந்த பின்பு ஜூன் 2 அன்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரி வாலின் ஜாமீன் மனு தில்லி மாவட்ட நீதி மன்றத்தில் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்கு பின்பு கெஜ்ரிவாலுக்கு இரவு 8 மணிக்கு ஜாமீன் வழங்கியது தில்லி மாவட்ட நீதி மன்றம். ஜாமீன் வழங்கப்பட்டதால் கெஜ்ரிவால் வெள்ளியன்று சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெஜ்ரி வாலின் ஜாமீனை எதிர்த்து அமலாக் கத்துறை தில்லி உயர்நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.
வெள்ளியன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த விடுமுறை கால நீதிபதி சுதிர் குமார் ஜெயின், “கெஜ்ரி வாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டார். அதோடு விசாரணை நீதிமன்றத்தின் ஜாமீன் முடிவையும் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.