மக்களவைத் தேர்தல் நெருங்கி யுள்ள நிலையில், அமலாக் கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட ஒன்றிய அரசு அமைப்பு கள் “இந்தியா” கூட்டணி தலைவர்களின் வீடுகள், தொடர்புடைய இடங்கள் மற் றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரு கின்றன. அதாவது தோல்வி பயத்தால் மக்களவை தேர்தலுக்கு முன் “இந்தியா” கூட்டணி தலைவர்களை சிறையில் அடைக்க மோடி அரசு திட்டமிட்டு இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
முதல்முறையாக பிரியங்கா காந்தி
இந்நிலையில், ஹரியானா நில பேர வழக்கு தொடர்பான குற்றப்பத்தி ரிகையில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கண வர் ராபர்ட் வதேரா ஆகியோரின் பெயர் களை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. இதற்கு முன்னதாகவும் பல வழக்கு களில் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை யின் விசாரணைகளுக்கு ஆளாகி யிருக்கும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பிரியங்கா காந்தி முதல் முறையாக இடம்பிடித்தி ருக்கிறார்.
அச்சத்தின் வெளிப்பாடா?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதன்மை பொறுப்பாளராக இருந்த பிரி யங்கா காந்திக்குப் பதிலாக அவினாஷ் பாண்டேவை புதியப் பொறுப்பாளராக நிய மித்தது காங்கிரஸ் கட்சி. அத்துடன் பிரியங்கா காந்தி பொதுச் செயல ராகத் தொடர்வார் என காங்கிரஸ் அறி வித்தது. இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி யின் தொகுதியான வாரணாசியில் அவ ருக்கு எதிராக பிரியங்கா காந்தி கள மிறங்க உள்ளதாக தகவல் வெளி யாகியது. இந்த தகவல் வெளியான 3 நாட்களில் அமலாக்கத்துறை வளை யத்தில் பிரியங்கா காந்தி சேர்க்கப்பட் டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.
அன்று ஆங்கிலேயர்கள் இன்று பாஜகவினர்
அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் பிரியங்கா காந்தி பெயர் சேர்க்கப்பட்டதற்கு “இந் தியா” கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிர தலைவர் நானா படோலே”காங்கிரஸைக் கண்டு பாஜக பயப்படுகிறது. அன்று ஆங்கி லேயர்கள் காந்தியை கண்டு நடுங் கிய நிலையில், இன்று காந்தி குடும் பத்தினரை கண்டு பாஜக நடுக்கு கிறது. இவற்றின் மூலம் உண்மை யான பிரச்சனைகளில் இருந்து மக் களை திசை திருப்ப பாஜக முயற் சிக்கிறது” என அவர் கூறியுள்ளார்.
இமாச்சலப்பிரதேச முதல்வ ரும், காங்கிரஸ் மூத்த தலை வருமான சுக்விந்தர் சிங் சுகு, “மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரின் பெயர்கள் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெறு கின்றன” எனக் கூறி கண்டனம் தெரி வித்துள்ளார்.