india

தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க முயலும் காவல்துறை

சென்னை, ஜூலை 31- சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன், பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 13,000க்கும் மேற்பட்ட இளம் பெண் ஊழியர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் இரவு - பகல் என்று  பாராமல் அனைத்து வித பணிகளும், பிற துறை பணிகளும் நிர்பந்தத்தின் காரணமாக செய்து வருகின்றனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதார இயக்குனரகம் முன் பாக  ஜனநாயக ரீதியில் பெருந் திரள் காத்திருப்பு போராட்டத்தை ஜூன் 30 அன்று நடத்துவது என்று மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் திட்டமிட்டது. திட்டமிட்டபடி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சென்னையை நோக்கி 29.07.2024 இரவு அந்தந்த மாவட்டங்களில் இருந்து புறப்பட்டனர். புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே  காவல்துறை ரயில் மற்றும் வேன் பேருந்துகளில் ஊழியர்களை அடையாளம் கண்டு  இரவோடு இரவாக பெண் ஊழியர்களை கைதுசெய்து இரவுமுழுவதும் மண்டபங்களில் சிறைபிடித்து வைத்தது. பல இடங்களில் பெண் ஊழியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளது.  

இதுபோன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை காவல் துறை அனு மதித்த இடத்தில் உண்ணவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி காவல்துறை கைதுசெய்துள்ளது. 

காஞ்சிபுரத்தில் தொழிற்சங்கம் அமைத்த எஸ்.எச்.எலக்ட் ரானிக்ஸ் நிறுவனத்தில் 12 நிர்வாகிகளை கூண்டோடு இடை நீக்கம் செய்ததை எதிர்த்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட சென்றபோது ஊர்வலத்தை காவல் துறையினர் தடைசெய்த னர். காஞ்சிபுரத்தில் எந்த இயக்கத்திற்கும் தடையென்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. 

திருநெல்வேலியில் சட்ட விரோத கதவடைப்பு செய்துள்ள கீங் பீடி, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் தொகையை பிஎப் நிர்வாகத்திடம் செலுத்தாமல் மோசடியில் ஈடு பட்ட காஜா பீடி ஆகிய நிறு வனங்களைக் கண்டித்து திரு நெல்வேலி, தென்காசி பீடித் தொழி லாளர் சங்கங்கள் சார்பில் திருநெல்வேலி தொழிலாளர் அலு வலகம் முன்பு நடத்தவிருந்த காத்தி ருப்பு போராட்டத்திற்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.

தொழிலாளர்கள் தங்கள்  நிறுவனங்கள் முன்பு ஜன நாயக  ரீதியில் நடத்தும் போராட்டங் களுக்கு அனுமதி மறுப்பதும், பெண்  தொழிலாளர்களை  நள்ளி ரவில் கைது செய்வது கண்டிக்கத் தக்கது. காவல்துறையின் இத்த கைய அடக்குமுறை போக்கானது ஜனநாயகக் குரல் வளையை நசுக்குவதாகும். இந்த பிரச்சனை யில் தமிழக முதல்வர் தலையிட்டு கைது செய்யப்பட்ட  ஊழியர் களை விடுதலை செய்து தொழிற் சங்கத்துடன் பேசி கோரிக்கைகள் மீது உரிய தீர்வுகாண வேண்டும்.