பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை யில் 80 சதவீதம் விளம்பரத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 2014இல் பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ (Beti Bachao, Beti Padhao)” என்ற பெயரில் “பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தை க்கு கல்வி கற்பியுங்கள்” என்ற புதிய திட்டத்தை துவங்கினார். பெயரளவிற்கு தொடங்கப்பட்ட இந்த திட்டம் இருப்பது நிறைய பெண்களுக்கு தெரியாது.
“பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ” திட்டம் தொடங்கப்பட்ட பின்புதான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை மிகமோசமான அள வில் அதிகரித்து வருகிறது. முக்கிய மாக பெண்களுக்கு பாதுகாப்பில் லா மாநிலங்களாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன. இந்நிலை யில், பிரதமர் மோடி முதல்வராக ஆட்சி செய்த மாநிலமான குஜராத் தில் ஒவ்வொரு நாளும் 6 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், “பேட்டி பச்சா வோ, பேட்டி பதாவோ” திட்டத்தி ற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 80 சதவீத தொகை விளம்பரத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது என காங்கி ரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகை யில்,”பெண்களுக்கு வணக்கம் செலுத்துவதைத் தவிர பிரதமர் மோடி வேறு எதுவும் செய்வார் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை. நாடு முழுவதும் உள்ள பெண்கள் பிரதமர் மோடியிடம் கேட்கும் சில முக்கிய கேள்விகள் உள்ளன. அதில் முக்கியமானது மணிப்பூர். கடந்த ஆண்டு முதல் ஒரு உண்மையான உள்நாட்டுப் போரின் நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெண்க ளும் அதிகம் என்ற நிலையில், மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக வின் இரட்டை ஆட்சியை அனுப வித்து வரும் பாஜக மணிப்பூரில் பெண்கள் தாக்கப்பட்டு நிர்வா ணமாக அணிவகுத்துச் செல்லப் பட்ட சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இன்று வரை மணிப்பூர் மாநிலத்து க்கு செல்வதற்கு பிரதமர் ஏன் கவலைப்படவில்லை? பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சுமத்திய கடுமையான பாலியல் குற்றச் சாட்டுகள் விஷயத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருந்து வரு கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தை விட பிரதமர் மோடி தலைமையி லான ஆட்சியில் பெண் தொழிலா ளர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துள்ளது. இது பொருளாதா ரத்தின் நீண்டகாலத் திறனை குறை மதிப்பீட்டுக்கு உட்படுத்தும் போக்காகும்.
கடந்த 2014இல் பதவிக்கு வந்த வுடனேயே “பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தை க்கு கல்வி கற்பியுங்கள்” திட்டத்தை பிரதமர் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கினார். ஆனால் அதன் பின்னர் இத்திட்டத்தின் பட்ஜெட் 80 சதவீதம் வரை விளம்பரங்களுக் காக ஒதுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
பெண் சிசுக் கொலை யை நிறுத்துவதற்கும், பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கும் பிரதமருக்கு தொலை நோக்குத் திட்டம் இருக்கிறதா? அல்லது விளம்பரத்தில் தனது முகத்தை அச்சிட்டு, தன்னை புரமோட் செய்துகொள்ளும் மற்றொரு வாய்ப்பாக இந்த பிரச்சனை இருக்கிறதா? இந்திய பெண்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர். “பாஜகவை அகற்று, மகளை காப்பாற்று” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.