பேரளிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஆளுநரின் சார்பில் ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை செய்யகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா? கடந்தமுறை 2 முடிவுகளை தேர்வு செய்யக் கூறினோம். ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? ஆளுநர் சார்பில் ஒன்றிய அரசு ஆஜராவது ஏன் என்பதற்கு பதிலளியுங்கள்.
ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் கால தாழ்த்தியதற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.