அயோத்தி அயோத்தி ராமர் கோவில் பகுதி நேர பணியாளரான கல்லூரி மாணவியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழு வதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ளது ராமர் கோவில். மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவிலின் துப்புரவு பணி யாளராக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்றி வருகிறார். கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் பகுதி நேரமாக, கல்லூரியில் படித் துக்கொண்டே ராமர் கோவிலில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் அந்த மாணவி அயோத்தி கான்ட் காவல்நிலையத்தில், “தன்னை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த னர்” என புகார் அளித்துள்ள சம்ப வம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மாணவி அந்த புகாரில் மேலும்,”அயோத்தி மாவட்டத்தின் சஹாதத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த வன்ஷ் சவுத்ரி, கடந்த ஆகஸ்ட் 16 அன்று என்னை கடத்தி, ராமர் கோவி லின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்து வைத்தார். தொடர்ந்து அவரது நண் பர்கள் உட்பட 8 பேர் என்னை கும்பல் பாலியல் பலாத்காரம் செய் தனர். 2 நாட்கள் என்னை கொடு மைப்படுத்தி, இதுகுறித்து வெளியே சொன்னால் என்னையும், எனது குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டி ஆகஸ்ட் 18 அன்று விடுவித்தனர். மிரட்டியதால் இந்த சம்பவத்தை நான் யாரிடமும் கூறவில்லை. உயி ருக்கு பயந்து வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். ஆனால் ஆகஸ்ட் 25 அன்று வன்ஷ் சவுத்ரி என்னை மீண்டும் கடத்திச் சென்றார். அவரு டன் உதித் குமார், சத்ரம் சவுத்ரி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் இருந்தனர். கார் விபத் தில் சிக்க நான் அவர்களின் பிடி யில் இருந்து தப்பினேன்” என புகா ரில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார்
அயோத்தியில் உள்ள கான்ட் காவல் நிலையத்தில் பாதிக்கப் பட்ட மாணவி ஆகஸ்ட் 26 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரை கான்ட் காவல் நிலைய போலீசார் ஏற்கவில்லை. தொடர்ந்து துப்புரவு பணியாளர் கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவுடன் செப்., 2 அன்று வழக்குப் பதிவு செய்தனர். 10 நாட்க ளுக்குப் பிறகு செப். 13 அன்று வன்ஷ் சவுத்ரி மற்றும் அவரின் நண் பர் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக அயோத்தி கான்ட் காவல் நிலைய ஆய்வாளர் அம்ரேந்திர சிங் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் - பாஜகவின் அரசி யல் ஆதாய பொருளான அயோத்தி ராமர் கோவிலில் பகுதி நேர பணி யாளரான கல்லூரி மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் கிளப்பியுள்ளன.