india

img

ஓவைசி கட்சியுடன் பாஜக கள்ளக்கூட்டணி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அசாதுதீன் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் பாஜக மறைமுகமாக கூட்டணி வைத் துள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி யின் செய்தி தொடர் பாளர் பிரியங்கா கக்கர் கூறுகை யில்,”பொதுவாக பாஜக தோற்கக்கூடிய சட்டமன்ற அல்லது மக்களவை தொகுதிகளில் போட்டியாளராக அதிக கட்சிகளை களமிறக்குகிறது. அதாவது பகுஜன் சமாஜ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சி களை களமிறக்கி, வாக்குகளை பிரித்து அதன் மூலம் பாஜக தோற்கக்கூடிய இடங்களில் வெற்றி பெறுகிறது.

மக்களவை தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர்களை நிறுத்திய இடங்க ளெல்லாம் பாஜக பலனடைந்தது. இது தான் பாஜகவின்  எதிர்மறை உத்தி யின் ஒரு பகுதி ஆகும்.

 வரவிருக்கும் தில்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முன் னாள் கவுன்சிலரான தாஹிர் ஹுசைனை தங்கள் பக்கம் இழுத்து, அவரை முஸ்தபா பாத் தொகுதியின் வேட்பாளராக கள மிறக்கியுள்ளது ஏஐஎம்ஐஎம். தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு உதவு வதற்காக ஓவைசி கட்சி களமிறங்கி யுள்ளது. இதன்மூலம் ஓவைசி கட்சி யுடன் பாஜக கள்ளக்கூட்டணி வைத்துள் ளது நிரூபணமாகியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.