சென்னையில் நடை பெற்ற தென் ஆப்பி ரிக்காவிற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மக்களவை தேர்தலில் சிறையில் இருந்தே வெற்றி பெற்ற காஷ்மீரைச் சேர்ந்த ரஷித் நாடாளுமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்க என்ஐஏ ஒப்புதல் அளித்துள்ளது. பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்ட பொறியாளர் ரஷித் வரும் 5 ஆம் தேதியன்று முறைப்படி எம்.பி.யாக உறுதி மொழி ஏற்கவுள்ளார்.
தில்லி
மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை
ரூ.10 லட்சம் அபராதம்
மத்தியப்பிரதேசம் - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்க ளின் நலனுக்காக துவங்கப்பட்ட அறக் கட்டளைக்கு நன்கொடை விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது. இந்த விவ காரம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர் அப்போது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக இருந்த வி.கே.சக்சேனா வுக்கு (தற்போதைய தில்லி துணைநிலை ஆளுநர்) எதிராக கடுமையாக குற்றச் சாட்டுகளை முன்வைத்தார். இந்த குற்றச் சாட்டு போலியானது எனக் கூறி 2000இல் மேதா பட்கருக்கு எதிராக சக்சேனா அவ தூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
23 ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்று வந்த இந்த அவதூறு வழக்கில் மேதா பட்கர் குற்றவாளி என கடந்த மே 24 அன்று தில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், தண்டனை விபரம் திங்களன்று அறிவிக்கப்பட்டது. அதில்,” அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறைத் தண்டனையும், வி.கே. சக்சேனாவிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என மேதா பட்கருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு
பெங்களூருவை மிரட்டும் டெங்கு
கர்நாடகா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பாதிப்பு தீவிரம டைந்து வருகிறது. சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, கர்நாடகா மாநி லம் முழுவதும் மொத்தம் 93,012 சந்தே கத்திற்கிடமான டெங்கு பதிவு செய்யப் பட்டுள்ள நிலையில், கடந்த 6 மாதம் 5,878 பேர் டெங்குவால் பாதிக்கப்பட் டுள்ளனர். பெங்களூரு பகுதியில் மிக குறு கிய காலத்தில் 777 பேர் (நகர் - 310, கிரா மப்புறம் - 467) டெங்குவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களில் டெங்கு வால் பெங்களூரில் 2 பேர் உயிரிழந் துள்ளதாகவும், பலரது நிலைமை கவ லைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது.
புதுதில்லி
அமலுக்கு வந்தது புதிய குற்றவியல் சட்டங்கள்
சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் புக்கு இடையே மோடி அரசால் அமல்படுத்தப்பட்ட மூன்று புதிய குற்றவியல் சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன் ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய அதிநியம் திங்களன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்நிலையில், முதல் நாளே பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) 2023 இன் கீழ் முதல் எப்ஐஆர் (FIR) தில்லியில் உள்ள கம்லா மார்க்கெட் காவல் நிலை யத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின் படி,”தில்லி ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தை ஆக்கிரமித்து ஒருவர் விற்பனை செய்து வந்ததாகவும், பிஎன்எஸ் பிரிவு 285இன் கீழ் சாலை யோர வியாபாரி மீது திங்களன்று காலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வும் காவல்துறை தரப்பில் வெளி யிட்டுள்ள எப்ஐஆரின்படி தகவல் வெளி யாகியுள்ளது. பிஎன்எஸ் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவர் பீகார் மாநிலம் பார்ஹ் பகு தியைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.