india

img

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவர்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவர்; இந்திய அரசியலில் துவக்ககாலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும், பின்னர் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டல் சக்திகளுக்கும், பிற்காலத்தில் இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்த பாஞ்சாலத்துச் சிங்கம் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். 1992ல் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 2004 வரை அப்பொறுப்பில் பணியாற்றிய காலத்தில் கட்சியின் பெருமையையும் புகழையும் இந்திய அரசியல் அரங்கில் வெகுவாக உயர்த்திய மாபெரும் தலைவர்.  சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவுக்குப் பிறகு உலக அரசியல் அரங்கில் முதலாளித்துவ சக்திகள் கொக்கரித்த போது, சோசலிசத்திற்கு எப்போதும் வீழ்ச்சி இல்லை என்று உரத்து முழங்கி உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கும் வழிகாட்டிய மகத்தான தலைவர் சுர்ஜித் வழியில் என்றென்றும் பீடுநடை போடுவோம்.