திருவனந்தபுரம்
கேரள பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ஓ.ஆர்.கேலு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைமையிலான இடதுமுன்னணி ஆளும் கேரள மாநிலத்தின் பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.ராதாகிருஷ்ணன் 18ஆவது மக்களவை தேர்தலில் ஆலத்தூர் தொகு தியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத் திற்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் புதிய பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக ஓ.ஆர்.கேலு தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஞாயிறன்று மாலை அவர் அமைச்சராக பொறுப்பேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழு உறுப்பினரும், ஆதிவாசி கேசம சமிதி என்ற பழங்குடியின அமைப்பின் மாநிலத் தலைவருமான ஓ.ஆர்.கேலு வயநாடு மாவட்டம் மானந்தவாடி தொகுதி எம்எல்ஏ வாக உள்ளார்.
புதுதில்லி
இன்று கூடுகிறது 18ஆவது மக்களவை முதல் கூட்டத்தொடர்
7 கட்டமாக நடைபெற்ற 18ஆவது மக்க ளவைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை இழந்த பாஜக, கூட்டணிக் கட்சிகளின் தயவோடு மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்றுள்ள நிலை யில், 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கு கிறது. ஜூலை 3 வரை நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரின் முதல் இரு நாள்க ளில் மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். தொடர்ந்து ஜூன் 26 அன்று மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதே போல மாநிலங்களவையின் 264 ஆவது அமர்வு ஜூன் 27 அன்று தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுதில்லி
நீட் முறைகேடு:சிபிஐ விசாரணை
நீட் தேர்வு முறைகேட்டை போல வினாத் தாள் கசிவு காரணமாக யுஜிசி நெட் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சனியன்று இரவு தேசியத் தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங்கை அப்பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஒன்றிய கல்வி அமைச்சகம் உத்தரவிட் டது. அவருக்கு பதிலாக பிரதீப் சிங் கரோ லாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசியத் தேர்வு முகமைத் தலைவர் பதவி வழங் கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது நீட் நுழைவுத் தேர்வு முறை கேடுகளை மத்திய புலனாய்வு அமைப் பான சிபிஐ விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து இளங்கலை நீட் முறைகேடு தொடர்பான விசாரணை யை ஞாயிறன்று காலை துவக்கி உள்ளது.
முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைப்பு
இளங்கலை நீட் தேர்வு முறைகேடு சர்ச்சைக்கு இடையே ஞாயிறன்று முதுநிலை நீட் தேர்வுகள் நடை பெறும் என ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. ஆனால் தற் போது இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படு வதாக கடைசி நேரத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் பங்கேற்ப தற்காக ஏராளமான மாணவர்கள் சொந்த ஊர்களை விட்டு, பல கிலோமீட்டர் பய ணித்து தேர்வு எழுதுவதற்காக சென்றி ருந்தனர். தற்போது திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் அந்த மாண வர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அமராவதி
ஆந்திராவில் வன்முறை பதற்றம்
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தெலுங்குதேசம் - ஜனசேனா - பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் நலன் பணியை விட தன்னை சிறையில் அடைத்த ஜெகன் மோகனை பழிவாங்கும் நோக்கத்தில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி யில் நிகழ்ந்த ஊழல் மற்றும் இதர சம்ப வங்களை விசாரிப்பதிலேயே தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இதனால கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன் மோகன் ஆட்சியின் ஊழல் சம்ப வங்களை தெலுங்கு தேச அரசு தோண்டி எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், சனியன்று விஜயவாடா மாவட்டம் தடபள்ளியில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் விதிகள் மீறி கட்டப்பட்டதாக கூறி தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அரசு இடித்து தகர்த்தது. இந்த சம்பவத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் - பாஜக கூட்டணி அரசின் அடுத்த டுத்த பழிவாங்கல் நடவடிக்கை காரண மாக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர கள் இடையே தேர்தல் காலங்களில் நிகழ்ந்தது போன்று மீண்டும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளது போன்ற சூழல் தென்படுகிறது.
கவுகாத்தி
வெள்ளத்தில் மிதக்கும் அசாம் 27 பேர் பலி ; 4 லட்சம் பேர் பாதிப்பு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான அசாமில் கடந்த 10 நாட்க ளாக அதீத அளவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 35 மாவட்டங்கள் உள்ள நிலையில், இதில் 22 மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கு கிறது. இந்த கனமழைக்கு மாநிலம் முழு வதும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 83,000 குழந்தைகள் உட்பட நிலையில், சுமார் 4 லட்சம் பேர் இயல்பு நிலையை இழந்துள் ளனர். இதில் 1.17 லட்சம் பேர் மிக மோச மான பாதிப்பை எதிர்கொண்டு உண வின்றி தவித்து வருகின்றனர். மாநிலத் தின் முக்கிய ஆறுகள் அனைத்தும் வெள்ள அபாய அளவை தாண்டி ஓடு வதால் 1,311 கிராமங்கள், 6,424 ஹெக் டேர் பரப்பளவை கொண்ட விவசாய நிலங்கள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 134 நிவாரண முகாம்கள் மற்றும் 94 நிவாரண விநியோக மையங் களை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அசாம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கூறி னாலும், பாதிக்கப்பட்ட 4 லட்சம் பேரில் வெறும் 17,661 பேர் மட்டுமே நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.