india

img

மக்களை காக்கும் செவிலியர்கள் பிரச்சனைகளைக் களைந்திடுக!

புதுதில்லி நாட்டில் உள்ள செவிலி யர்கள் பிரச்சனைகளைக் களைந்திட ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வி.சிவதாசன் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள் ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத் தில் டாக்டர் வி.சிவதாசன் பேசிய தாவது:

செவிலியர்கள் பிரச்சனை சம் பந்தமாக முக்கியமான பிரச்சனைக ளை எழுப்பு வாய்ப்பு கொடுத்த தற்காக முதற்கண் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். மருத்துவத் தாதிகளின் முன்னோடியான பிளாரன்ஸ் நைட்டிங்கேல், “மனித குலம், நாம் சொர்க்கத்திற்கு போவ தற்கு முன், இந்தப் பூவுலகிலேயே சொர்க்கத்தை உருவாக்க வேண் டும்” என்று கூறியிருந்தார். ஆனால், நாட்டில் இன்றையதினம் இந்த உல கத்தில் சொர்க்கத்தை உருவாக்கு வதற்காக உழைத்துக் கொண்டி ருக்கும் செவிலியர்கள் என்னும்  மருத்துவத்  தாதிகளின் நிலை என்ன?

ஒவ்வொரு செவிலியரும் தங்கள் பணியை மேற்கொள் ளும்போது “மக்களின் நலனுக்காக நான் என்னை  அர்ப்பணம் செய்து கொள்கிறேன்” என்றே உறுதி எடுத்துக்கொள்கிறார்கள். உலக  சுகாதார ஸ்தாபனத்தின் வழி காட்டும் விதிகளின்படி, ஆயிரம் நபர்களுக்கு மூன்று செவிலியர்கள் இருந்திட வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கையில் பாதிய ளவைக்கூட நாம் பெற்றிருக்க வில்லை.

60 லட்சம் செவிலியர்கள் தேவை...

இந்திய நர்சிங் கவுன்சில் கூற்றின்படி, நமக்கு 60 லட்சம் செவி லியர்கள் தேவை. நம்மிடம் போது மான அளவிற்கு மருத்துவமனை கள் கிடையாது. நம்மிடம் போது மான அளவிற்கு செவிலியர்களும் கிடையாது. இருக்கும் செவிலி யர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஏன் இந்த நிலை? இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புக்காக, தனிநபர் ஒவ்வொருவருக்கும் செலவளி க்கப்படும் தொகை என்னவென்று பாருங்கள். இந்தியாவில் இது 626 ரூபாய் மட்டுமே. கேரளாவில் இது 3,311 ரூபாயாகும்.

செவிலியர்களின் பெரும்பாலா னவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல மருத்துவமனைகள் தேவையான 1:4 என்னும் செவிலியர்-நோயாளி விகிதத்தைப் பின்பற்றுவதில்லை. பொது சுகாதாரத் துறையிலும் செவிலியர்-நோயாளி விகிதம் தேவைப்படும் நெறிமுறைக ளுக்குச் சம்பந்தமே இல்லாமல் தான் இருக்கிறது.

14 மணிநேர வேலை...

பல செவிலியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்தபோது என்ன நிலையில் பணியில் சேர்ந்தார்களோ அதே நிலையில்தான் ஓய்வு பெறுகிறார்கள். பதவி உயர்வு  என்பதே அநேகமாக அவர்களுக் குக் கிடையாது. ஒவ்வொரு செவி லியரும் நாளொன்றுக்கு 9 முதல் 14 மணி நேரம்வரை வேலை செய்கி றார்கள். அடிக்கடி ஒரு நாளைக்கு இரு ஷிப்டுகளும் வேலை செய்கி றார்கள். அவர்களின் ஆரம்ப ஊதியம், குறைந்தபட்ச ஊதியத் திற்கும் மிகவும் கீழ்நிலையில்தான் இருக்கிறது.

அவர்கள் ஒப்பந்த அடிப்படை யில் வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பணிநிலைமைகள் மிகவும் மோசம். பொதுத்துறைக ளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ப்பது அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவை இவர்க ளின் நிலைமைகளை மேலும் மோசமாக்கி இருக்கின்றன.

இரு வேறு ஊதிய நிலை...

ஒரே மருத்துவமனையில் இரு வேறு ஊதிய நிலைகளில் செவிலி யர்கள் பணியாற்றி வருகிறார்கள். நிரந்தரப் பணியில் உள்ள செவிலி யர்களுக்கு ஓர் ஊதியம், ஒப்பந்த செவிலியர்களுக்கு வேறொரு ஊதியம்.

எனவே செவிலியர் சமூ கத்திற்கு ஒரு நாகரிகமான வருமா னம், பணி நிலைமையில் பதவி உயர்வுகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை உத்தரவாதப் படுத்திட வேண்டியது அவசிய  அவசரத் தேவையாகும்.

இந்த அரசாங்கம் புகழ் பெற்ற மருத்துவத் தாதி பிளாரன்ஸ் நைட்டிங்கேல் வாசகத்தை  என் றென்றும் நினைவுகூர்ந்திட வேண்டும். அதாவது, “எவரொரு வரிடமும் விருப்போ வெறுப்போ காட்டக்கூடாது. மக்களின் நலனில் கவனம் செலுத்துவது என்பதே உண்மையான நாட்டுப்பற்று.” இவ்வாறு டாக்டர் வி.சிவதாசன் பேசினார்.            (ந.நி.)