அயோத்தியில் பாபர் மசூதி யை இடித்து, அங்கு கட்டப் பட்டுள்ள ராமர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலைக்கான கல் வழங்கியவர் கர் நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்தாஸ் ஆவார். தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயியான ராம்தாஸ் தனது 2.14 ஏக்கர் மொத்த நிலத்தை யும் கர்நாடகாவில் ராமர் கோவில் எழுப்ப தானமாக அளிப்பதாக அறி வித்தார். இந்நிலையில், ராமர் சிலைக்கு கல் தானம் அளித்த ராம்தாஸ் மற்றும் கற்களை பாறையில் இருந்து கடும் சிரமத்துடன் உடைத்துக் கொடுத்த குவாரி குத்தகைதாரர் ஸ்ரீனிவாஸ் நடராஜ் ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக் கப்படவில்லை.
காசும் தரவில்லை
ராமர் சிலை செய்த கல்லை தோண்டி எடுத்ததற்கு தனக்கு சட்ட விரோத சுரங்கப்பணி செய்ததாக ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்ட தாக குவாரி குத்தகைதாரர் ஸ்ரீனி வாஸ் நடராஜ் கூறியுள்ளார். அதே போல் உடைக்கப்பட்ட 3 கற்களை யும் அயோத்தி கொண்டுபோய் சேர்க்க தனக்கு ரூ.6 லட்சம் செல வானதாகவும், ஆனால் தனக்கு வெறும் ஒரு லட்சத்து 95 ஆயிரம் மட்டுமே பணம் கொடுத்ததாகவும் வருத்தத்துடன் அவர் தெரிவித்துள் ளார்.
சிலைக்கான கல் தானம் அளித்த தலித் விவசாயி மற்றும் கல்லை கொண்டுபோய் சேர்த்த குவாரி குத்தகைதாரர் இருவருக்கும் கூட ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பு இல்லாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.