india

img

நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் மாற்றம்!

தில்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்ந்த இல்லம்,  கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக செயல்பட்டு வருகிறது. நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சுதந்திரப் போராட்டங்கள் தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இந்த அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக நேரு நினைவு சொசைட்டி இயங்கி வருகிறது. நேரு நினைவு சொசைட்டியின் தற்போதைய தலைவராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளார். அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உட்பட 29 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சூழ்நிலையில் சொசைட்டியின் பெயரை பிரதமர்கள் அருங்காட்சியகம் என மாற்றப் போவதாக 2022-இல் மோடி அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரிலிருந்து நேரு பெயர் நீக்கப்பட்டு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் சொசைட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அருங்காட்சியகத்தில் 14 முன்னாள் பிரதமர்களின் நினைவுகள், சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.