india

img

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் தேசாய்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். மிகக் கடினமான இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல நீரஜ் கடும் முயற்சிகளை  மேற் கொண்டது பாராட்டத்தக்கது.  நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே ஒலிம்பிக் போட்டியில் அவரது சிறந்த சாதனை அளவாகும்.

இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது. “நீரஜ் வென்ற வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்ற பாகிஸ்தானை சேர்ந்த நதீமும் என் பிள்ளை தான்” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார். நீரஜின் தந்தை சதீஷ் குமார் , “ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான நாள் என்பது இருக்கும். இன்றைய நாள் பாகிஸ்தானுக்கானது. ஆனால் நாமும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளோம். அது நிச்சயமாக நமக்கு பெருமிதமான தருணம் தான். நீரஜின் வெற்றி அடுத்த தலை முறையினருக்கு உத்வேகம் தருவதாக இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

நீரஜ் அடைந்த வெற்றி விளையாட்டு உலகில் பிரகாசிக்கத்துடிக்கும் லட்சக்கணக்கான இந்தி யர்களுக்கு நிச்சயமாக  உத்வேகத்தை ஏற் படுத்தும்.  ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய ரான நீரஜ் சோப்ராவின் சாதனையால் இந்திய தேசமே பெருமை கொள்கிறது. எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை குவித்து நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என்று இந்நாளில் நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக நீரஜ் சோப்ராவை வாழ்த்துவோம்.

இறுதிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வ தற்கான தூரத்தை பாகிஸ்தான் வீரர் நதீம் எட்டிய போது அவரை நீரஜ் சோப்ரா தோளில் தட்டி பாராட்டினார். இந்தியாவில் கடந்த பத்தாண்டுக ளாக மத  நல்லிணக்கம் சீர்குலைக்கப்பட்டது.  மக்களை மதரீதியாக ஆட்சியாளர்கள் பிரிக்க முயன்றனர். விளையாட்டுத் துறையில் நீடிக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக  வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு சாம்பி யன்கள் தள்ளப்பட்டனர்.   குறுகிய அரசியல் நலன்களுக்காக ஒன்றிய ஆட்சியாளர்கள் சின்னப் புத்தியுடன்  நடந்து கொண்டாலும் அவ்வப்போது மக்கள் தங்களின் நல்லிணக்க செயல்பாடுகள் மூலம் பாடம் கற்றுத் தருகி றார்கள். இதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

தன் மகனின் வெற்றி குறித்து, மத  நல்லி ணக்கத்துடன்  நீரஜ் சோப்ராவின் பெற்றோர் அளித்த  பேட்டியை, கோடிக்கணக்கான இந்திய  மக்களின் ஆழ்மனதிலிருந்து வந்த வார்த்தைக ளாகவே பார்க்க வேண்டும். இதுதான் உண்மை யான இந்தியா. இந்த இந்தியாதான் நமக்கு தேவை.