மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் செவ்வாயன்று இரவு 10 மணியளவில் பிரஹன்மும்பை (மும்பை மாநகரா ட்சி) போக்குவரத்து நிறுவனத்திற்கு (பெஸ்ட்) சொந்த மான அரசு பேருந்து அந்தேரி நோக்கி சென்று கொண்டி ருந்தது. குர்லா வுக்கு அருகே கட்டுப் பாட்டை இழந்த பேருந்து சாலமன் சாலையில் சென்று கொண்டு இருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அதிவேகமாக அடுத்தடுத்து மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்தி லேயே 3 பேர் உயிரிழந்தனர். காயம டைந்த 46 பேர் சியோன் மற்றும் குர்லா பாபா மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 7 ஆக அதி கரித்துள்ளது. அதீத வேகம் காரணமாக பெஸ்ட் பேருந்தின் பிரேக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் செய்திகள் வெளியாகியுள்ளன.