தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எஸ்.எஸ்.சி தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் மல்டி டாஸ்கிங் ஊழியர்களுக்கான (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். அதன்படி, நடப்பு ஆண்டு முதல் எஸ்.எஸ்.சி நடத்தும் பல்வகை பணிக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்து மொழிகளிலும், அதனோடு தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, மராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.