குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் கடந்த மாதம் தில்லியை நோக்கி பேரணியாய் புறப்பட்டனர். தில்லி - ஹரியானா எல்லையில் மோடி அரசின் தாக்குதலால் 3 விவசாயிகள் அடுத்தடுத்து பலியாகினர். தாக்குதலில் பலநூறு விவசாயிகள் காயமடைந்தனர். இதற்கிடையே, ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதை யடுத்து பிப்ரவரி மாதம் இறுதியில் தில்லி நோக்கி போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். ஆயினும் முன்னேற்றம் ஏதுமில்லை. இந்நிலையில், புதனன்று விவசாயிகள் மீண்டும் தில்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
அரசு உரிமம் பெற்ற ஓடிடி தளத்தை கேரள அரசு தொடங்கியுள்ள நிலையில், இதற் கான துவக்க நிகழ்ச்சி வியாழனன்று திருவனந்த புரத்தில் நடக்க உள்ளது.
தில்லி சட்டமன்றத்தில் 7 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை அம்மாநில உயர்நீதிமன்றம் புதனன்று ரத்து செய்தது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநில அர சின் ஆளுமையின் கீழ் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகம் ஜபல்பூரில் செயல் பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவினருக்கு மார்ச் 5அன்று செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவித்து விட்டு, செவ்வாயன்று தேர்விற்கான ஏற்பாடுகளை செய்யாமல் பல்கலைக்கழக நிர்வா கமே தேர்வை மறந்த அலட்சியம் நிகழ்ந்துள்ளது.
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான ஸ்ரீகாந்த் ஜெனா புதனன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கொல்கத்தா
திரிணாமுல் நிர்வாகியை உடனே சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவு
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்ட திரிணா முல் காங்கிரஸ் கட்சியின் மண் டல தலைவராக இருப்பவர் ஷாஜகான் ஷேக். இவர் ரேஷன் ஊழல் தொடர்பாக தன்னை கைது செய்ய வந்த அமலாக் கத்துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தனது கூட்டாளிகளுடன் கடந்த ஜனவரி 5 அன்று தலைமறைவானார்.
இவர் தலைமறைவான பின்பு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்தேஷ்காளி கிராம பெண்கள் ஷாஜகான் ஷேக் உள்ளிட்ட அவரது கூட் டாளிகள், குண்டர்களுடன் மிரட்டி நிலத்தை பறித்தும், பாலியல் வன்கொடுமை செய்த தாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான தோழர் நிராபதா சர்தா தலைமையில் போராட்டம் நடத்தினர். பல்வேறு கட்ட போராட்டத்தாலும், கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவாலும் 55 நாட்களுக்கு பிறகு ஷாஜகான் ஷேக்கை மேற்குவங்க காவல்துறை கைது செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஷேக் ஷாஜகானை காவலில் எடுத்து விசாரிக்க மாநில காவல்துறையிடம் சிபிஐ அனுமதி கோரியது. இதற்கு மாநில காவல்துறை மறுப்பு தெரிவிக்கவே சிபிஐ கொல்கத்தா உயர்நீதிமன்றம் சென்றது. இதுதொடர்பான வழக்கு புதனன்று விசா ரணைக்கு வந்த நிலையில், ஷேக் ஷாஜ கானை உடனே சிபிஐயிடம் ஒப்படையுங் கள் என கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதி பதிகள் மேற்குவங்க அரசிற்கு உத்தர விட்டனர்.
ஒயிட்பீல்டு
பெங்களூரு குண்டுவெடிப்பு
துப்பு கொடுத்தால்
ரூ.10 லட்சம் பரிசு
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உண வகத்தில் கடந்த மார்ச் 1 அன்று 10 நொடி இடைவேளையில் 2 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் படுகாய மடைந்துள்ள நிலையில், இதுதொடர் பான வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத் தது கர்நாடக அரசு.
இந்நிலையில், இந்த வழக்கில் முக் கிய ஆதாரமாக சிசிடிவி மட்டுமே உள்ள நிலையில், வீடியோவில் நடந்து செல்லும் இளைஞர் குறித்து யாராவது துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் அளிக்கப்படும். தகவல் கொடுப்பவர் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று என்ஐஏ புதனன்று அறி வித்தது.