india

முதல்வராய் இருந்தபோது கூட்டாட்சி பேசியவர் மோடி

“நியாயமற்ற, அநியாயமான, ஒழுக்  கக்கேடான வரிப் பகிர்வு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதி பறிக்கப்படுவதற்கு எதிரான எதிர்ப் பின் முக்கிய வெளிப்பாடு தான் இந்தப் போராட்டம். ஒரு காலத்தில், தமிழ்நாடு தனது வருவாயில் 70 சதவீதத்தை ஒன்  றிய அரசின் வரிப்பங்காகவும், 30 சத வீதத்தை ஒன்றிய திட்டங்களின் மூல மாகவும் பெற்று வந்தது. ஆனால் இப்  போது வரிப்பங்கின் மூலம் பாதிக்கும் குறைவாகவும், ஒன்றிய திட்டங்களில் பாதிக்குக் குறைவாகவும் தான் வரு வாய் கிடைக்கிறது. 

ஒன்றிய அரசின் திட்டங்களில் 20 சதவீதம் மட்டுமே ஒன்றிய அர சின் பங்களிப்பாக உள்ளது. மீதமுள்ள  80 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பா கும். ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்க ளில் பிரதமர் மோடியின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்தவும், ஒன்றிய அரசையும் விளம்பரப்படுத்தவும் வற்பு றுத்துகிறார்கள். இல்லை என்றால் அந்த  20 சதவீதம் நிதியும் குறைக்கப்படுகிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரா னது.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதற்கு நிவாரண நிதியாக ஒரு ரூபா யைக் கூட ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.  தமிழ்நாட்டின் அண்ணா, கலைஞர் ஆகி யோர் கூட்டாட்சிக்காக குரல் கொடுத் ததை போல, மறைந்த முன்னாள் முதல்  வர் ஜெயலலிதாவும் மாநில உரிமைக்  காக போராடி உள்ளார். ஜெயலலிதா எங்களுக்கு எதிர்க்கட்சி தான். ஆனா லும் அதை சொல்ல வேண்டும்.

இந்தியாவில் முன்பு முதலமைச்சர் ஒருவர் இருந்தார். ஒன்றிய அரசு தங்களை  கடுமையாக வஞ்சிக்கிறது என்று அடிக்  கடி கூறி, கூட்டாட்சி தத்துவம் பற்றி பக்கம்  பக்கமாக பேசுவார். எங்கள் மாநிலத்தின்  வரிப் பணத்தை எடுத்து ஏதோ வேறு மாநி லங்களுக்கு வாரி இறைக்கிறார்கள் என்றெல்லாம் கூறினார். அவர் வேறு யாரும் அல்ல, தற்போது நம் நாட்டின் பிரத மராக உள்ள குஜராத்தின் மூன்று முறை  முதல்வர் நரேந்திர மோடி தான். நரேந்திர  மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக  3 முறை இருந்தபோது கூட்டாட்சித் தத்து வத்தின் தலைசிறந்த சாம்பியனாக இருந்தார். ஒன்றிய அரசை விமர்சிக்கும் விஷயங்களில் மோடி எங்களின் முன்மாதிரி. மனிதர்கள் மாறுகிறார்கள். இருக்கைகள் மாறுகின்றன. எதுவுமே நிரந்தரம் இல்லை” என கடுமையாக சாடினார்.