பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இனி வேலையில்லை
சுப்பிரமணியன் சுவாமி சூடு
7 கட்டமாக நடைபெற்று வந்த 18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று நடை பெற்றது. புதனன்று அதிகாலை வரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடி வில் மொத்தமுள்ள 543 தொகுதியில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களிலும், “இந்தியா” கூட்டணி 234 தொகுதிகளிலும், மற்றவை 17 தொகுதி களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2019 மக்களவை தேர்தலில் 303 இடங் களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக இம்முறை 240 தொகுதிகளை மட்டுமே பெற்று, கூட்ட ணிக் கட்சிகளிடம் மன்றாடி 3ஆவது முறையாக ‘கூட்டணி’ ஆட்சி அமைக்க அடுத்தகட்ட வேலையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், “பெரும்பான்மை இல் லாததால் பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இனி வேலையில்லை” என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மோடிக்கு எதிராக கருத்து தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மக்கள் புறிக்கணித்துள்ளனர். பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்று, பெரும்பான்மை பெறாததால் மோடி பதவி விலக வேண்டும். சுயமரியாதை உள்ள எந்த தலைவரும் நிச்சயம் ராஜி னாமா செய்துவிடுவர்; பதவி நீக்கும் வரை காத்திருக்க மாட்டார்கள். இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை பிரத மர் மோடி வழங்கவில்லை. பிரதமர் மோடி தோல்வி பயத்தால் தேவையில்லாத பல விஷயங்களை பிரச்சாரத்தின் போது பேசி னார். இனி பிரதமர் அலுவலகத்தில் நீடிக்க மோடிக்கு வாய்ப்பில்லை” என அவர் கூறினார்.
வனேஸ்வரம்
ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்
ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 147 தொகு திகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 74 இடங்கள் தேவை என்ற நிலையில், செவ் வாயன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக் கையில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சி யை இழந்தது. 78 தொகுதிகளை கைப்பற் றிய பாஜக முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களை விட எழுச்சி கண்டு 14 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகு தியை வென்றுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநில முதல் வர் பதவியை நவீன் பட்நாயக் புதனன்று ராஜினாமா செய்தார். புவனேஸ்வரில் ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை வழங்கிய நிலையில், கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஒடிசா சட்டப்பேரவை யை கலைத்தார்.
இதனிடையே ஒடிசாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியை பாஜக துவங்கியுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசா வின் முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. நவீன் பட்நாயக் ஒடிசா வில் 2000ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சி யாக 5 முறை சட்டமன்ற தேர்தலில் வென்று 24 ஆண்டுகள் முதல்வராக இருந் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசம்
சாதனை படைத்த காங்., வேட்பாளர்
அசாம் மாநிலம் துப்ரி மக்களவை தொகுதியில் காங்கி ரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன், பாஜக வேட்பா ளர் முகமது அஜ்மலை 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் 8ஆவது மக்களவை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன்.
இதே வரிசையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஷங்கர் லால்வானி 10.08 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
48 வாக்குகளில் வெற்றி
நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் வெறும் 48 வாக்கு கள் வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று தப்பியுள்ளார். வடமேற்கு மும்பை தொகுதி யில் சிவசேனா (ஷிண்டே) கட்சியின் வேட்பாளர் ரவீந்திரன் (4,52,644), வெறும் 48 வாக்குகள் வித்தி யாசத்தில், சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் அமோத் காஜனனை (4,52,596) வீழ்த்தினார். 18ஆவது மக்க ளவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெற்றவர் ரவீந்திரன்.