india

img

ராணுவத் தளபதி அலுவலகத்தில் ஓவியத்தை மாற்றிய மோடி அரசு முன்னாள் ராணுவத்தினர் கடும் எதிர்ப்பு

புதுதில்லி இந்திய ராணுவத்தில் ஓர் ஓவியம் மாற்றப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந் துள்ளது. ராணுவத் தலைமைத் தளபதியின் அலுவலகத்தில் இருந்த ஒரு வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த ஓவியம் அண்மையில் அகற்றப்பட்டது. இந்த ஓவியம் சாதாரணமானது அல்ல. 1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரண டைந்த காட்சியை சித்தரித்த ஓவியம் இது. 

இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ வெற்றிகளில் ஒன்றாக கரு தப்படும் 1971 போரின் முடிவில் தான் வங்கதேசம் என்ற புதிய நாடு உருவானது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு நாடு மற்றொரு நாட்டிடம் முழுமையாக சரணடைந்த அரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. அந்த வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தும் இந்த ஓவியம் நீண்ட காலமாக ராணுவத்  தலைமையகத்தில் இருந்து வந்தது.

ஆனால் இப்போது அந்த ஓவி யத்திற்கு பதிலாக ‘கர்ம ஷேத்ரா - செயல்களின் களம்’ என்ற புதிய ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஓவியத்தில் லடாக் பகுதி யின் பாங்காங் ஏரி, மலைகள், கருடன், கிருஷ்ணரின் தேர், சாணக்கியர், நவீன ராணுவ வாகனங்கள் போன் றவை சித்தரிக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் ராணுவத்தினர் கடும் அதிருப்தி

இந்த மாற்றம் முன்னாள் ராணுவ வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் இந்த மாற்றத்தை கடு மையாக எதிர்த்துள்ளது. வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வெற்றியின் நினைவுச் சின்னத்தை அகற்றுவது சரியல்ல என்று சாடியுள்ளது. மேலும், ராணு வத்தில் மத அடையாளங்களான கருடன், கிருஷ்ணர் தேர் போன்ற வற்றை கொண்டு வருவது பொருத் தமற்றது என்று கருத்து தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

குறிப்பாக, பாங்காங் ஏரி பகுதியில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புகளை மறைக்கவே இந்த புதிய ஓவியம் வைக்கப்பட்டுள் ளதாக முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பழைய  ஓவியத்தை தங்கள் சங்கத்திற்கு வழங்கினால், அதை பாதுகாத்து மரியாதையுடன் வைத்திருப்பதா கவும் அவர்கள் கூறியுள்ளனர். 

விமர்சனங்களுக்கு பதிலளித்த ராணுவம், பழைய ஓவியத்தை மானேக்சா கன்வென்ஷன் சென்ட ரில் வைத்துள்ளதாக தெரிவித்துள் ளது. ஆனால் இந்த நடவடிக்கை முன்னாள் ராணுவ வீரர்களை திருப்திப்படுத்தவில்லை. ராணு வத்தின் பாரம்பரியத்தையும், மதச் சார்பற்ற தன்மையையும் பாது காக்க வேண்டும் என்பதே அவர்க ளின் கோரிக்கை. 

இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி யுள்ளது. ராணுவத்தின் பாரம்பரி யம், மதச்சார்பற்ற தன்மை, வர லாற்று நினைவுகளின் முக்கியத்து வம் ஆகியவை குறித்த முக்கி யமான கேள்விகளை இந்த சர்ச்சை எழுப்பியுள்ளது. 

ராணுவத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை சிதைக்கும் முயற்சி

இந்திய ராணுவத்தின் பெருமை மிக்க வரலாற்றில் கரும்புள்ளியாக இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.  இந்த மாற்றம் தற்செயலானது அல்ல. மோடி அரசின் இந்துத் துவ அரசியலின் தொடர்ச்சியான திட்டமிட்ட நடவடிக்கையின் ஒரு  பகுதி இது.

கல்வி, பொருளாதாரம், சமூக அமைப்புகள் என அனைத் திலும் இந்துத்துவ கொள்கையை புகுத்திய அரசு, இப்போது ராணுவத் தையும் விட்டு வைக்கவில்லை.  “ராணுவத்தின் மதச்சார்பற்ற தன்மையை சிதைப்பது ஆபத்தா னது” என்று குமுறியுள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள். இந்திய ராணுவத்தில் இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் என அனை த்து மதத்தினரும் சகோதரர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களின் ஒற்றுமையும், நாட்டுப் பற்றுமே ராணுவத்தின் வலிமை.

 “இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பதில் ராணு வம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதை மதவாத அரசியலுக்கு பயன்படுத்துவது நாட்டின் ஒற்று மைக்கே ஆபத்தானது” என எச்ச ரிக்கிறார்கள் ராணுவ நிபுணர் கள். மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவின் கடைசி கோட்டை யாக இருக்கும் ராணுவத்தையும் மதவாத அரசியலுக்குள் இழுப் பது என்பது நாட்டின் எதிர்காலத் திற்கே ஆபத்தானது என்பதே பொது கருத்தாக உருவெடுத் துள்ளது.B