புதுதில்லி ‘நீட்’ தேர்வு வினாத்தாள் முறை கேடு விவகாரத்தில் தவ றிழைத்தவர்கள், ஆதாயம் அடைந்தவர்கள் கண்டறியப்படா விட்டால், மறுதேர்வுக்கு உத்தர விட வேண்டியது வரும் என ஒன்றிய பாஜக அரசையும், தேசிய தேர்வு முகமையையும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐ மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தர விட்டுள்ளார்.
நீட் முறைகேடு தொடர்பான வழக்கு திங்களன்று (ஜூலை 8) தலைமை நீதிபதி டி.ஓய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வெளிநாடுக ளுக்கு நீட் வினாத்தாள் எப்படி அனுப்பி வைக்கப்படுகிறது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி னர். அதற்கு, தூதரகங்கள் மூலம் நீட் வினாத்தாள் அனுப்பி வைக்கப் படுவதாக ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, “இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று நீதிபதி கள் எழுப்பிய அடுத்த கேள்விக்கு, “ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாண வர்கள் உள்ளிட்டோர் கைது செய் யப்பட்டு இருக்கிறார்கள். அந்த மாணவர்களின் மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று ஒன்றிய அரசு சமாளித்தது. ஆனால், “டெலிகிராம், வாட்ஸ்- ஆப் (Telegram, Whatsapp) போன்ற சமூக வலைதளங்களில் நீட் வினாத்தாள் கசிந்ததால் காட்டுத்தீ போல பல இடங்களுக்குப் பரவி யுள்ளது.
ஒரு இடம் மட்டும் இல்லா மல் பல இடங்களில் பெருமள வில் நீட் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்த தேர்வு நேர்மையாக நடை பெறவில்லை. எனவே, நீட் முறை கேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசி யம்” என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் வினாத்தாள்கள் எப்போது எஸ்பிஐ, கனரா வங்கி லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டன? எப்போது திறக் கப்பட்டன?வினாத்தாள் கசிவு எப்போது நடந்தது?,
எந்தெந்த வகையில் வினாத்தாள்கள் கசிந்தன மற்றும் பரப்பப்பட்டன? வினாத்தாள் கசிவு மற்றும் உண்மை யான தேர்வுக்கு இடையேயான கால இடைவெளி? ஆகியவற்றை இன்றைய தேதி வரை உள்ள தக வல்களின் அடிப்படையில் தெளிவு படுத்த வேண்டும்” என்றார்.
அதேபோல “வினாத்தாள் கசிவு நடந்த மையங்கள், நகரங்களை அடையாளம் காண தேசிய தேர்வு முகமை எடுத்த நடவடிக்கைகள், அடையாளம் காண பின்பற்றப் பட்ட முறைகள் மற்றும் இதுவரை வினாத்தாள் கசிவால் ஆதாயம் அடைந்ததாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் எண் ணிக்கை, அவர்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தங்களின் இந்தக் கேள்விகளுக்கு ஜூலை 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று தேசிய தேர்வு முகமைக்கும், சிபிஐ-க்கும் உத்தர விட்டார்.
மேலும், “நீட் தேர்வின் புனிதத் தன்மையை உறுதி செய்வதில் நீதிமன்றம் அக்கறை கொண்டுள் ளது. இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்கக் கூடாது. இதற் காக, புகழ்பெற்ற நிபுணர்களைக் கொண்ட பல்துறைக் குழுவை அமைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது அவசியமாகும். ஏற் கெனவே குழு அமைக்கப்பட்டி ருந்தால், அதுகுறித்த முழு விவ ரங்களையும் அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
குழுவைத் தொடர அனுமதிக்க வேண்டுமா அல்லது அமைப்பை மாற்ற வேண்டுமா என்பதை நீதிமன்றம் பின்னர் பரிசீலிக்கும். இளநிலை நீட் தேர்வை ரத்து செய்வது கடைசி முயற்சியாகவே இருக்கும்” என்று கூறினர். மறு தேர்வு கோரும் மனுதாரர்க ளும், தங்களின் ஒருங்கிணைந்த கோரிக்கையை 10 பக்கங்களுக்கு மிகாமல் மனுவாக தாக்கல் செய்ய வும் தலைமை நீதிபதி அறிவுறுத்தி னார். வழக்கு ஜூலை 11 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.