சொன்னது
n “வளர்ந்த இந்தியாவிற்கு பங்களிக்கும் வகையில், நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான சூழல் ஏற்படுத்தித் தரப்படும்” - மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
n “அமைப்புசாரா துறைகளில் தொழிலாளர்களின் நலனுக்கான பணிகள் மேம்படுத்தப்படும்”;
n “10-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட அனைத்து நிறுவனங்களும், பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரிப்பதற்கு உள்மட்ட குழுவை அமைக்க வேண்டும்” - 2022 இல் மத்திய தொழிலாளர் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.
n “பணி நிலைகளை ஆய்வு செய்து, அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும்”. - 2024 பாஜக தேர்தல் அறிக்கை
n “ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் மதிப்பூதியத்தை உயர்த்தி இருக்கிறோம்” - 2019 பாஜக தேர்தல் அறிக்கை
n “மகப்பேறு நலச் சட்டப்படி, 2017-இல் ஊதியத்துடன்கூடிய மகப்பேறு விடுப்பு 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகரிப்பு”
- இவை அனைத்தும் ஒன்றிய பாஜக தலைமையிலான மோடி அரசு கடந்தாண்டுகளில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தவை. ஆனால், நாட்டில் நடக்கும் அனைத்தும் இவற்றுக்கு எதிராக உள்ளன.
உண்மை நிலவரம்
l கொரோனா பெருந்தொற்று காலத்தில், கடந்த 2020 மார்ச் முதல் டிசம்பர் வரை
47 சதவீத பெண்கள் வேலை இழந்துள்ளனர். ஆண் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகை யில், இதில் 7 சதவீதம் பேர் தங்கள் வேலையை நிரந்தரமாக இழந்துள்ளனர்.
l இந்தியாவில்தான் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு உலகளவில் மிகக் குறைவாக உள்ளது. அதிலும், 10 சதவீதம் பேர் மட்டுமே முறையாக ஊதியம் பெறும் பணியாளர்களாக இருக்கின்றனர்.
l வேலைக்குச் செல்லும் பெண்களில் 92 சதவீதம் பேர், ஒவ்வொரு நாளும் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிறது ஒன்றிய அரசின் நேரப் பயன்பாட்டு தரவுகள். பெண்களின் இந்த சிரமங்களைப் போக்க எந்தவொரு கொள்கை நடவடிக்கைகளும் இல்லை.
l சமையல் எரிவாயு விலை ரூ.1000-க்கும் மேல் உயர்ந்து, பெண்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
l 2019 இல் சமமான மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தும் ஊதியக் குறியீடு நிறைவேற்றப்பட்ட போதிலும், ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதிய வேறுபாடு, சம்பளம் பெறும் வேலையில் 34 சதவீதமாகவும், சாதாரண வேலையில் 50 சதவீதமாகவும், சுய வேலைவாய்ப்பில் 160 சதவீதமாகவும் உள்ளது.
l வீட்டுப் பணிப் பெண்களில், பத்தில் 9 பேர் அவர்கள் செய்யும் வேலைகள் மட்டு
மின்றி, கூடுதலாக வேறு வேலைகளையும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இப்பணி
களுக்கு கூடுதல் ஊதியம் தரப்படுவதில்லை. மேலும், தங்கிப் பணிபுரியும் பெண்கள் உடல்ரீதியாக அதிக துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். பல தனி நபர்கள் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், மோடி அரசு தனது ஆட்சிக் காலத்தில், வீட்டுப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டது.
l வீட்டுப் பணிகளில் குறைந்தபட்சம் 2 கோடி பெண்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்கள் சொற்ப ஊதியத்திற்காக உழைக்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் இதே நிலைதான். நியாயமான ஊதிய விகிதத்தை அளிக்க பரிந்துரைத்து, ஒரு வரைவு தேசிய கொள்கை மோடி அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பாஜக அரசு அதை புறக்கணித்துவிட்டது.
l பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களின் விவகாரத்தில் மோடி அரசாங்கம் எப்படி செயல்படுகிறது என்பதை, பெண் மல்யுத்த வீராங்கனைகள் வீதிக்கு வந்து போராடிய காட்சிகள் நமக்கு தெளிவுபடுத்தின. ஏனென்றால், இவர்கள் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் பாஜக எம்.பி., மீது புகார் அளித்தனர். இந்த வீராங்கனைகளின் புகார்களை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை.
l புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வந்த போது, 2024 கணக்கெடுப்பில் இதுகுறித்த புகார் மீது பதிலளித்தவர்களில் 59 சதவீத நிறுவனங்கள், போஷ் (PoSH - Prevention of Sexual Harassment at workplace) சட்டம் 2013 இன்படி, தங்கள் நிறுவனங்களில் உள்குழுக்களை அமைக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு எதிராக மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
l ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் பிற பணியிடங்களில் தற்போது வரை போஷ் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தை அமல்படுத்தாத இவர்களும் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். பணியிடங்களில் நிகழும் பல்வேறு விதமான பாலியல் தொல்லைகளால், 40 சதவீத பெண்கள் தாம் பாதுகாப்பின்றி இருப்பதாக உணர்கின்றனர். பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டப்பூர்வ வழக்குகள் பெரும்பாலும் முறைகேடுகளால் மூடி மறைக்கப்படுவதாக 30 சதவீத பெண் தொழிலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
l 2018 ஆம் ஆண்டிலிருந்து அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒன்றிய அரசு எந்த ஊதிய உயர்வும் வழங்கவில்லை. தற்போது, அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.4500, பகுதிநேர அங்கன்வாடி பணியாளருக்கு ரூ.3500 மற்றும் உதவியாளருக்கு ரூ.2250 என மாத மதிப்பூதியத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2009-லிருந்து மதிய உணவுப் பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படாத நிலையில், 2018 முதல் ஆஷா பணியாளர்களின் ஊதியம் மாதம் ரூ.2000 என்ற அளவிலேயே இருக்கிறது.
l ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களில் பணியாற்றும் சுமார் 80 லட்சம் தொழிலாளர்களுக்கு (பெரும்பாலும் பெண்கள்) ‘தொழிலாளர்’ என்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருகிறது.
l அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், மதிய உணவு பணியாளர்கள், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் (NCLP) - ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை ‘தொழிலாளர்களாக’ அங்கீகரித்து, அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட பலன்களை வழங்க வேண்டுமென 45 மற்றும் 46 ஆவது இந்திய தொழிலாளர் மாநாடுகள் வலியுறுத்தின. ஆனால் இந்த கோரிக்கைகளை மோடி அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது.
l பெண்கள் பணியாற்றும் ஐசிடிஎஸ், என்ஹெச்எம் (National Health Mission), எம்டிஎம்எஸ் (Mid Day Meal Scheme) உள்ளிட்ட திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை, மோடி அரசு வெகுவாக குறைத்துள்ளது. இதில் ஐசிடிஎஸ்-க்கு 55 சதவீதம், எம்டிஎம்எஸ்-க்கு 30 சதவீதம் மற்றும் என்ஹெச்எம்-க்கு 20 சதவீதம் என்ற வகையில் கடுமையாக குறைத்துள்ளது. ஒன்றிய அரசு இந்த நலத்திட்டங்களை முற்றாக ஒழித்து, அவற்றை வேதாந்தா, பெப்சிகோ, பதஞ்சலி மற்றும் இஸ்கான் (என்ஜிஓ) உள்ளிட்ட கார்ப்பரேட்களுக்கு தாரைவார்த்து, தனியார்மயமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
l தனியார் துறைகளில் பெரும்பாலான பெண்கள், ஒப்பந்த அல்லது அவுட்சோர்சிங் தொழிலாளர்களாக உள்ளனர். இதனால் சட்டப்படி இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
l தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013 (NFSA13) ரூ.6000 செலுத்துவதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் ரூ.5000 என்ற ஒருமுறைப் பலனை மட்டுமே செலுத்துகிறது. இது 2017 ஆம் ஆண்டு முதல் மாறாமல் உள்ளது. சமீபத்தில், இது இரண்டாவது பெண் குழந்தைக்கு மட்டும் ரூ.6000 என உயர்த்தப்பட்டது. தகுதியான பயனாளிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே இத்திட்டத்தை அணுக முடியும். மேலும், பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, 2022 இல் அதன் எண்ணிக்கை 46 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2023-24 இல் இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 17 சதவீதம் குறைந்துள்ளது. இதில், 29 சதவீத பயனாளிகள் மட்டுமே இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர்.
பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!
பாஜகவைத் தோற்கடிப்போம்!
தமிழில் : ஆர்.நித்யா