அவை ஒத்திவைப்பு மற்றும் விடு முறை தினத்திற்கு பிறகு நாடாளு மன்ற மக்களவை, மாநிலங்க ளவை திங்களன்று மீண்டும் கூடியது. மக்க ளவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படு கிறது. பழங்குடியினர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்குத லுக்கு ஆளாகி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் சிறையில் உள்ள னர்; நானும் தாக்குதலுக்கு உள்ளாகி அம லாக்கத்துறையின் 55 மணி நேர தொடர் விசாரணையை சந்தித்தேன். 20க்கும் மேற் பட்ட வழக்குகள், 2 ஆண்டுகள் சிறை, எனது எம்.பி. பதவி, என்னுடைய வீடு பறிக்கப் பட்டது. இதெல்லாம் பாஜகவின் திட்ட மிட்ட செயலாகும்” எனக் கூறினார்.
மோடி இந்துக்களின் பிரதிநிதி அல்ல
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு மோடி அரசு பழிவாங்குகிறது. பாஜகவினருக்கு அதி காரம் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. பிர தமர் மோடி கடவுளுடன் நேரடித் தொடர் பில் இருப்பதாக கூறுகிறார். கடவுள் மோடி யிடம் மும்பை விமான நிலையத்தை அதா னிக்கு தர வேண்டும் எனக் கூறினாரா? ஆவணப் படம் மூலமே மகாத்மா காந்தி யை உலகம் அறிந்ததாக மோடி கூறுகிறார். மோடி வேண்டுமானால் ஆவணப்படம் மூலம் காந்தியை அறிந்திருக்கலாம். இந் தியா சகிப்புத்தன்மை உள்ளிட்ட மூன்று அம்சங்கள் மீது கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்து தர்மத்தை கூட பாஜக பின்பற்றுவது இல்லை. ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல” எனக் கூறினார்.
அயோத்தி பாஜகவுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளது
“பாஜகவின் அரசியல் முறைக்கு அயோத்தி பாடம் கற்பித்துக் கொடுத்துள் ளது. அயோத்தி விமான நிலையம் கட்டப் பட்ட இடம் வலுக்கட்டாயமாக கையகப் படுத்தப்பட்டது. அயோத்தி ஜென்மபூமி விழாவில் மக்கள் யாரும் பங்கேற்க அனு மதி வழங்கவில்லை. பொதுமக்களுக்கு அழைப்பும் இல்லை, அவர்கள் வரவும் இல்லை. ஆனால் அம்பானியும், அதானி யும் மட்டுமே திறப்பு விழாவில் பங்கேற்ற னர். அயோத்தி அமைந்துள்ள தொகுதி யில் போட்டியிட பிரதமர் இரு முறை முயற் சித்தார். ஆனால் கணிப்பாளர்கள் வேண் டாம் என மோடியிடம் தெரிவித்துவிட்டனர். அதனால் மீண்டும் வாரணாசிக்கு சென் றார்” எனக் கூறி அயோத்தியை உள்ள டக்கிய பைசாபாத் மக்களவை தொகுதி யை தலித் சமூகத்தைச் சேர்ந்த அசுவ தேஷ் பிரசாத்திற்கு (சமாஜ்வாதி) கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மோடியும், அமித் ஷாவும் ஏன் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை?
மேலும், “பாஜகவின் கொள்கைகளா லும், அரசியலாலும் மணிப்பூரை எரித்து விட்டனர். மணிப்பூர் உள்நாட்டுப் போர் பிராந்திய பகுதியாக மாறியுள்ளது. இது வரை பிரதமர் நரேந்திர மோடியும், உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் மணிப்பூர் மாநிலத்துக்கு செல்லவில்லை” எனக் கூறினார்.
சபாநாயகர் - ராகுல் காந்தி இடையே வாக்குவாதம்
தொடர்ந்து சிவபெருமான் படத்தைக் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, “இப்படி கடவுள் புகைப்படங்களைக் காட்டுவது அரசியல் சாசன விதிமீறல்” எனக் கூறி னார். “அவையில் சிவபெருமான் படத் தைக் காட்டக்கூடாதா? இதில் என்ன தவறு?” என கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு, “எந்தவொரு பதாகையையும் காட்டக் கூடாது” என ஓம் பிர்லா கூற, இருவருக்கும் வாக்குவாதம் போன்று உரையாடல் நடந்தது. ஆனாலும் சபா நாயகரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இஸ்லாமிய மதச் சின்னம், குருநானக் புகைப்படத்தை காட்டி தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “சிவபெருமான் கழுத்தில் உள்ள பாம்பு போலத்தான் அச்சமின்றி எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் செயல்படு கிறோம்” என்று தெரிவித்தார்.