புதுதில்லி, டிச. 23- நியூஸ்கிளிக் ஊடகத்தின் இணையதள கணக்குகளை முடக்கி ஒன்றிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு, நாட்டில் செயல் படும் பல்வேறு ஊடக அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா, இந்திய மகளிர் பத்திரிகையாளர் அணி, தில்லி பத்திரிகையாளர் சங்கம், பத்திரிகையாளர் சங்கம், கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், உழைக்கும் செய்தி ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் அவை கூறி யிருப்பதாவது:
நியூஸ்கிளிக் என்னும் செய்தி இணைய தளத்தின் கணக்குகளை முடக்கியதை, ஊடகவிய லாளர் அமைப்புகளாகிய நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி ஒரேயடியாக எடுத்துள்ள இந்நடவடிக்கையால், நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்க ளுடைய குடும்பத்தினர் வருமானத்தை இழந்துள் ளார்கள். டிசம்பர் மாதத்தில் வேலை செய்த 19 நாட்களுக்கும் ஊழியர்களுக்கும், துணை ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறை யின் அடாவடி நடவடிக்கை காரணமாக இயற்கை நீதி மற்றும் தொழிலாளர் நல சட்டங்களின் அனைத்து அடிப்படை விதிமுறைகளும் மீறப் பட்டிருக்கின்றன. நியூஸ்கிளிக் நிறுவனம் எப்போ தும் அரசின் வரிவிதிப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து வந்திருப்பதால், அதன் கணக்கு களை முடக்கிட, தகவல் தொழில்நுட்பத் துறைக்கு எந்த அடிப்படையும் இல்லை.
அமலாக்கத்துறையினரும், வருமான வரித்துறையினரும் அக்டோபர் மாதம் நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்காயஸ்தா மற்றும் நிர்வாக அலுவலர் அமித் சக்ரவர்த்தி ஆகியோ ரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, அதன் ஊழியர்கள் இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு இரையாகியுள்ளனர் என்பதைக் குறித்துக் கொள்வது முக்கியமாகும்.
புர்காயஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் மீது கொடூரமான சட்டத்தின் பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர்கள் இவ்வாறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்படுவது, விதி விலக்காக இல்லாமல் ஒரு விதியாகவே மாறி யிருப்பதை அவதானிக்க முடிகிறது. இருவரும் நீதித்துறையின் காவல் அடைப்பில் காலவரை யறையின்றி வைக்கப்பட்டிருப்பது தொடர்கிறது.
முன்னெப்போதுமில்லா அதீத நடவடிக்கை
கவலைக்குரிய மற்றொரு அம்சம், புலன் விசாரணை செய்கிறோம் என்ற சாக்குப்போக்கின் கீழ் ஊழியர்களின் மொபைல் போன்கள், கணினிகள் வகைதொகையின்றி கைப்பற்றப் பட்டிருப்பதாகும். இதர சுயேச்சையான ஊடகநிறு வனங்கள் பலவற்றின்மீதும் இத்தகைய அதீத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தபோதிலும், அக்டோபர் மாதத்தில்தான் முதன்முறையாக, நியூஸ்கிளிக் இதழாளர்கள், முன்னாள் ஊழியர்கள் மற்றும் அந்த இணைய தளத்திற்கு பங்களிப்புச் செய்திட்டவர்களின் மொபைல் போன்கள், மடிக் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களும் ஓர் அதிகாலைப் பொழுதில் கைப்பற்றப்பட்ட செய்கையானது, முன்னெப் போதும் இல்லாததாகும்.
சம்பாதிப்பவர்களில் ஒரேயொரு நபராக இருக்கும் பல குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஊடக சாதனங்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்தும், அவை எப்போது மீண்டும் அவர்க ளுக்குத் திருப்பி அளிக்கப்படும் என்பது தெரியாத நிலையிலும், அவ்வாறு திருப்பி அளிக்கப்பட்டாலும் அதற்குள் உள்ள செய்தி கள் திருத்தப்படாமல் அப்படியே திருப்பி அளிக் கப்படலாம் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லாத நிலையிலும், அவர்களுக்குத் தங்கள் தொழிலைத் தொடர வேறு வழியேதும் இல்லாத நிலையில் புதிய சாதனங்களை அவர்கள் வாங்க வேண்டியிருந்தது.
\மேலும் கூடுதலாக, நியூஸ்கிளிக் ஊழியர்க ளும், நிருபர்களும் விசாரணை என்று காரணம் காட்டி, பல தடவைகள் அழைப்பாணைகள் அனுப்பப்பட்டும், விசாரணை மேற்கொள் ளப்பட்டும் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் தொடர்ச்சியாகத் துன்புறுத்தல்க ளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
துன்புறுத்தலை நிறுத்துக!
இவ்வாறு ஊடகங்கள் மீதும் ஊடகவிய லாளர்கள் மீதும் சோதனைகள், கைதுகள், கொடூரமான சட்டத்தின் பிணையில் விட முடியாத குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுதல், அவர்களின் கணக்குகளை முன்னறிவிப்புகள் எதுவுமின்றி முடக்கி வைத்தல் மற்றும் அவர்களின் மின்னணு உபகர ணங்களைப் பறிமுதல் செய்தல் போன்ற வடிவங்களில் அவர்களைத் துன்புறுத்துதல் முதலானவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.
ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கு இத்தகைய மின்னணு உபகரணங்களே உயிர்நாடியாக இருப்பதால், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்திடும் விதத்தில் குறிவைத்து இத்தகைய பறிமுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நம் ஜனநாய கத்தின் மற்ற தூண்கள் சுதந்திரமாக அனு மதிக்கப்படுவதைப்போல, ஊடகங்களும் சுதந்திரமாக அனுமதிக்கப்பட வேண்டியது அவசி யமாகும். சுதந்திரமான ஊடகங்கள் ஜனநாய கத்தை வலுப்படுத்திடும், அவற்றின் கழுத்தை நெரிப்பதென்பதும், அவற்றிற்கு மனச்சோர்வை ஏற்படுத்துவதென்பதும் எதிர் விளைவுகளையே அளித்திடும்.
இவ்வாறு ஊடகங்களின் அமைப்புகளின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.