india

img

பெண் வேடமிட்டு கல்லூரி மாணவிகள் விடுதியில் திருடிய நபர்!

தில்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீ ராம் வணிக கல்லூரியின் பெண்கள் விடுதியில், மர்ம நபர் ஒருவர் பெண் வேடமிட்டு மாணவர்களின் டெபிட் கார்டுகள் மற்றும் பணம் திருடிய சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி, தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் தேர்தல் நடைபெற்ற தினத்தில், ஸ்ரீ ராம் வணிக கல்லூரியின் பெண்கள் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவி ஒருவரின் டெபிட் கார்டு காணாமல் போனது. சிறிது நேரத்தில், அந்த மாணவியின் வங்கி கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை அடுத்து அவர் டெபிட் கார்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, மேலும் சில மாணவிகளின் டெபிட் கார்டுகள் மற்றும் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், விடுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகிய வீடியோவை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் பெண் வேடமிட்டு மாணவர்களின் டெபிட் கார்டுகள் மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதை அடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

;