india

ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பது ஏன்?

நாடாளுமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் தேர்தல் ஆணையர் அருண்  கோயல் சனிக்கிழமையன்று ராஜினாமா  செய்தார். 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலை யில் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரியில் மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த அனூப் பாண்டே ஓய்வு பெற்றார்.  இதையடுத்து 3 பேர் கொண்ட தேர்தல் ஆணைய குழுவில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே பதவி யில் உள்ளார். இரண்டு தேர்தல் ஆணை யர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.  இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒன்றிய அரசை கேள்வி எழுப்பி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இன்னும் சில நாட்களில் நாடாளு மன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலை யில், இந்தியாவில் தற்போது ஒரே ஒரு தேர்தல் ஆணையர் மட்டுமே இருப்பது ஏன்? நான் முன்பு கூறியது போல், சுதந்திர நிறுவனங்களின் திட்டமிட்ட அழி வை நாம் நிறுத்தாவிட்டால் நமது ஜன நாயக சர்வாதிகாரத்தால் அபகரிக்கப் படும். வீழ்ச்சி அடைந்த கடைசி அரசி யலமைப்பு நிறுவனமாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது இருக்கும்.

மோடி அரசு பதில் அளிக்க வேண்டும் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடு எடுக்கும் புதிய நடைமுறை தற்போது ஆளும் கட்சிக்கும், பிரத மருக்கும் அனைத்து அதி காரங்களை வழங்கியுள்ள நிலையில், பிப்ரவரி 23 அன்று பதவி காலம் முடிந்த பிறகும் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்காதது ஏன்? இந்த கேள்விகளுக்கு மோடி அரசு பதில் சொல்லி நியாயமான விளக்கத்தை அளிக்க வேண்டும்’’ என்ற கூறியுள்ளார்.