india

img

எம்.ஃபில்., பிஹெச்.டி. மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க  ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு!

எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க ஆறு மாத காலம் அவகாசம் பல்கலைக்கழக மானியக்குழு வழங்கியுள்ளது.

இதுகுறித்து  பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறுகையில், கொரோனா நோய் தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை செய்ய முடியவில்லை, குறிப்பாக நூலகங்களை பயன்படுத்த முடியவில்லை என்று மாணவர்கள் கூறியதால் எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க  ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பயிலும் காலம் 5 ஆண்டுகளாகவே கணக்கில்கொள்ளப்படும். என அவர் தெரிவித்தார்.

முன்னதாக டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;