india

img

தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-யின் கீழ் 7 ஆண்டுகள் சிறை - சட்ட ஆணையம் பரிந்துரை

தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-யின் கீழ் குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று மாற்றம் செய்து தொடர சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக 124-ஏ சட்டப்பிரிவு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இந்த கொடுங்கோல் சட்டப்பிரிவு ஒழிக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போதும் அதன் பிறகும் பிரிவு 124 ஏ ஒழிக்கப்பட வேண்டும் என்பது போன்ற விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் இருந்தன. இந்த சட்டம் தற்போதைய நடைமுறைக்கு பொருந்தாது என கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த வழக்கின் விசாரணையில் இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்ததை அடுத்து தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில், தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-யின் கீழ் தற்போது இருக்கும் குறைந்தபட்ச 3 ஆண்டுகள் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக மாற்றம் செய்து தொடர 22வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
 

;