கர்நாடக மாநில தலை நகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக் கில் பாஜகவிற்கும் தொடர் புள்ளதை என்ஐஏ அதி காரிகள் போட்டுடைத்துள்ள நிலையில், பாஜக நிர்வாகி யான சாய் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டு தயாரிப்பதும், குண்டை வைப்பதும், குண்டை போடு வதும் என அனைத்திலும் பாஜகவினரே ஈடுபடுவ தாக, நாடு முழுவதும் அவர் களுக்கு எதிராக கண்டனங் கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், ராமேஸ் வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவிற்கு உள்ள தொடர்பை காங்கி ரஸ் மூத்த தலைவரும், கர் நாடகா மாநில சுகாதாரத் துறை அமைச்சரான தினேஷ் குண்டுராவ் சுட்டிக்காட்டி னார். இந்த விவகாரத்தை திசை திருப்பும் நோக்கத்தில் விஜயபுரா தொகுதி பாஜக எம்எல்ஏவான பசனகவுடா பாட்டீல் யத்னால், தினேஷ் குண்டுராவின் மனைவியான தபுசும் ராவின் மதத்தை மறை முகமாக ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள் ளார். இதுகுறித்து அவர் கூறு கையில்,”அமைச்சர் குண்டு ராவ் வீட்டில் பாகிஸ்தான் உள்ளது. எனவே தேச விரோத அறிக்கைகளை வழங்குவது அவரது வழக் கம்” எனக் கூறினார். அதா வது அமைச்சர் குண்டுராவ் வீட்டில் பாகிஸ்தான் என குறிப்பிடுவது, குண்டுரா வின் மனைவி தபசும் ராவை குறிக்கிறது. தபசும் ராவ் முஸ்லிம் என்பதை சொல்லா மல் பாகிஸ்தான் என்று மறை முகமாக கூறியுள்ளார் பசன கவுடா பாட்டீல்.
இந்த விவகாரம் தொடர் பாக தபுசும் ராவ் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார்.
சண்டிகர்காங்கிரஸில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்
பாஜக மற்றும் மோடிக்கு எதி ரான அலை நாடு முழுவதும் தீவிரமைடைந்து வரும் நிலையில், இதனை உணர்ந்து முக்கிய தலை வர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக் கள் பாஜகவை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். இந் நிலையில், பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான பிரிஜேந்தர் சிங் கடந்த மார்ச் 10 அன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த நிலையில், இவரது தந்தை யும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஹரியானா மாநிலத்தின் பாஜக மூத்த தலைவருமான பிரேந்தர் சிங் திங்களன்று பாஜகவிலி ருந்து விலகி மீண்டும் காங்கி ரஸ் கட்சிக்கு திரும்ப உள்ள தாக அறிவித்துள்ளார் பிரேந் தர் சிங். 40 ஆண்டுகள் காங்கி ரஸ் கட்சியில் கோலோச்சிய பிரேந்தர் சிங் கருத்து வேறு பாடு காரணமாக அக்கட்சி யில் இருந்து விலகி கடந்த 2014இல் பாஜகவில் இணைந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.