புதுதில்லி, ஜூலை 22- கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான டாக்டர் வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகியோர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற் காக ஞாயிறன்று நள்ளிரவு 11:30 மணி அளவில் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓய்வறையில் தங்கி இருந்தனர்.
அப்போது வி.சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகிய இருவருக்கும் செல்பேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைப்பை ஆன் செய்து பேசிய வி.சிவதாசனிடம்,”நாங்கள் குர்பத்வந்த்சிங் பன்னூனின் “நீதிக்கான சீக்கியர்கள்” என்ற அமைப்பில் இருந்து பேசு கிறோம். நீதிக்கான சீக்கியர்கள் காலிஸ்தான் பொதுவாக்கெடுப்புடன் நாடாளுமன்றம் மற்றும் செங்கோட்டையை குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். நீங்கள் வாக்கெடுப்பில் பங்கேற்க விரும்பவில்லை என்றால், நாடாளுமன்றம் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்று கூறி மறைமுக எண்ணில் தொடர்பு கொண்ட நபர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்
திங்களன்று காலை சிவதாசன் எம்.பி., மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கரி டம் எழுத்துப்பூர்வமாகவும், காலிஸ்தான் அமைப்பின் மிரட்டல் உரையாடல் விவரங் களையும் இணைத்தும் புகார் கடிதம் கொடுத்தார். தொடர்ந்து வி. சிவதாசன் எம்.பி., தில்லி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் கடிதத்தில், “நாடாளுமன்றம் மற்றும் செங்கோட்டையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை சீரிய கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. புகாரை ஏற்றுக்கொண்ட தில்லி துணை ஆணையர் எப்ஐஆர் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளார்.
தில்லியில் பலத்த பாதுகாப்பு
நாடாளுமன்றம், செங்கோட்டை, தில்லி நகரம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த்சிங் பன்னூன் மிரட்டல் விடுக்கும் சம்பவம் கடந்த 8 மாதங்களாக உள்ளது. ஆனால் முதன்முறையாக தனிநபர் என்ற முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு குர்பத்வந்த்சிங் பன்னூன் அமைப் பின் கீழ் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தில்லி நகரில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளு மன்றம், செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.