டாக்கா,ஜன.7- வங்கதேசத்தின் 12 ஆவது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஜனவரி 7 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை நடைபெற்று முடிந்தது. 3 மணி வரை மிகக் குறைவாக வெறும் 27.15 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.
வங்கதேசத்தின் 11.9 கோடி வாக்கா ளர்களைக் கொண்ட 350 நாடாளுமன்ற தொகுதிகளில் 300 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 90 பெண்கள், 79 சிறுபான்மையினர் உள்பட 1,970 வேட்பாளர்களும் 747 சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மொத்தம் 42 ஆயிரம் வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தல், ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சிக்கும், ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான போட்டி யாகப் பார்க்கப்படுகிறது. தற்போ தைய பிரதமர் ஷேக் ஹசீனா தலை மையிலான அவாமி லீக் சார்பில் 266 வேட்பாளர்களும் அவரது கூட்டணி வேட்பாளர்கள் 34 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் பிரதான எதிர்க் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (BNP), ஷேக் ஹசீனா தலைமையி லான அரசின் தேர்தல் நம்பகத்தன்மை யுடன் இருக்காது எனவும் நியாயமான முறையில் தேர்தலை நடத்த கட்சி சார்பில்லாத தற்காலிக பொது அர சாங்கத்தை நிறுவ வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தது. ஹசீனா அரசு அதனை நிராகரித்துவிட்டது. இதனால் அக்கட்சி இத்தேர்தலை புறக்கணித்து 48 மணிநேர நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவித் தது. இந்நிலையில் உருவான வன் முறையில் 14 வாக்குச்சாவடிகள் மற்றும் பள்ளிகள் தீவைத்து எரிக்கப் பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலே வங்கதேசம் முழு வதும் தீவைப்புச் சம்பவங்கள் உட்பட பல்வேறு கலவரங்கள் நடந்துள்ளன. இதில் கிட்டத்தட்ட 15 நபர்கள் பலியாகி யுள்ளனர். இதனால் 8 லட்சம் ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு அதி காரிகளுடனும் 3 ஆயிரம் நீதிபதிகள் கண்காணிப்புடனும் இந்த தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவு பெற்ற பிறகும் சில நாட்களுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.