india

img

காஷ்மீரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

காஷ்மீரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஷா ஃபைசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை 370 ஆவது பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதை அடுத்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரியான ஷா பைசல், தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். பைசல் தில்லியில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து கடும் கண்டனம் தெரிவித்து நிலையில், அவரை தில்லி விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்து, ஸ்ரீநகருக்கு அழைத்து சென்று தடுப்புக் காவலில் வைத்தனர். இந்நிலையில் பைசல் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் அரசியல் தலைவர்களான அலி முகமது சாஹர், நயீம் அக்தர், சர்தாஸ் மதானி, ஹிலால் லோன் ஆகியோர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;