india

img

சிபிஎம் மத்தியப்பிரதேச மாநில செயலாளராக ஜஸ்விந்தர் சிங் தேர்வு

இந்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்  பிரதேச மாநில மாநாடு இந்தூர் மாவட்டம் மோவ்  வில் 2024 டிசம்பர் 15 முதல் 17 வரை  3 நாட்கள் நடைபெற்றது.  அம்பேத்கர் மண்... மோவ், அண்ணல் அம்பேத்க ரின் பிறந்த இடம் ஆகும். ஆர்எஸ்எஸ்-பாஜகவின் கொடூர மான தாக்குதல்களுக்கு எதிராக வும், இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடத்த இந்த இடம் தேர்ந் தெடுக்கப்பட்டது.

பாதல் சரோஜ் தலைமையில்  பேரணி மற்றும் பொதுக்கூட்டத்து டன் மாநாடு தொடங்கியது. அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் கள் சுபாஷினி அலி, டாக்டர் அசோக்  தாவ்லே, மத்தியக் குழு உறுப்பி னர்கள் டாக்டர் விக்ரம் சிங், ஜஸ்  விந்தர் சிங் உள்ளிட்டோர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர். 198 பிரதிநிதிகள் அதன்பிறகு கொடியேற்றத்து டன், தியாகிகளுக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தி, இரங்கல் தீர்  மானத்துடன் மாநாட்டு நிகழ்வுகள்  துவங்கின.

மாநாட்டை சுபாஷினி  அலி தொடங்கி வைத்து, தற்போ தைய அரசியல் சவால்களையும் அவற்றை எதிர்கொள்ள கட்சி மற்  றும் இடதுசாரிகளின் பலத்தை பல  மடங்கு அதிகரிக்க வேண்டியதன்  அவசியத்தையும் வலியுறுத்தி னார். பிரதிநிதிகள் அமர்வில் 26  மாவட்டங்களில் இருந்து 198 பிரதி நிதிகள் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் ஜஸ்விந்  தர் சிங் அரசியல் மற்றும் அமைப்பு  அறிக்கையை இரண்டு பகுதி களாக முன் வைத்தார். தொடர்ந்து ஒவ்வொன்றிலும் தனித்தனியாக விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் 47 தோழர்கள் பங்  கேற்றனர். பதிலுரைக்குப் பிறகு  அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்  கொள்ளப்பட்டது. 8 தீர்மானங் களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் உரையாற்றும் போது டாக்டர்.அசோக் தாவ்லே மற்றும் ஆர்.அருண் குமார் ஆகி யோர் சில முக்கிய அரசியல் மற்றும்  அமைப்பின் பணிகளை வலியு றுத்தினர்.

இறுதியில் பேர் கொண்ட புதிய  மாநிலக் குழு ஒருமனதாகத் தேர்ந்  தெடுக்கப்பட்டது. ஜஸ்விந்தர் சிங்  மீண்டும் மாநிலச் செயலாளராக வும், 11 பேர் கொண்ட மாநிலச்  செயற்குழுவும் தேர்ந்தெடுக்கப் பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டின் மதுரை நகரத்தில் நடைபெற வுள்ள அகில இந்திய மாநாட்டிற்கு  5 பிரதிநிதிகளும், மாற்றுப் பிரதி நிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். சுபாஷினி அலி மாநாட்டை நிறைவு செய்தார்.