நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் மட்டும் கூறினால் போதாது. உரிய விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு விசாரணை நடத்த வில்லையென்றால் கைது செய்யப்பட்ட சஞ்சீவ் முக்யா அரசியல்வாதிகளுடன் இருக்கும் படங்களை அம்பலப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். பீகார் அரசு எச்சரிக்கையாக இருப்பது நல்லது.