சுமார் ஒரு கோடிக்கும் மேலான இந்தியர் களின் செல்போன்களை ஆக்கிரமித்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய மேலும் 17-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது.
மேற்குவங்கத்தில் சட்டமன்றத்தில் போராட் டம் நடத்தியதற்காக பாஜகவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி உள்பட 6 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால் பாஜக தோல்வி பயத்தால் ஆள்பிடி வேலை யை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அவர் விரை வில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி சிறப்பு நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் தலைமறைவாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷாஜகான் ஷேக் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. சந்தேஷ்காலி பாலியல் சம்பவம் என்று குறிப்பி டப்படும் இந்த பிரச்சனை தொடர்பாக சந்தேஷ்காலி யில் வன்முறை வெடித்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நாட்டின் முன்னணி விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதமா கும். தற்போது சுமார் 9,000 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் திங்க ளன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் - கார் மோதிய விபத்தில் 2 வாகனங்க ளும் தீப்பிடித்தன. இந்த கோர விபத்தில் 5 பேர் உயி ரிழந்த நிலையில், பலர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நைனிடால்
‘முஸ்லிம் வீடுகளை இடித்து காவல்நிலையம் கட்டப்படுமாம்’
பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநி லம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானிக்கு அருகே உள் ளது பன்பூல்புரா. அப்பகுதியில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 2 கிமீ சுற்றளவுள்ள பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதிமன்றம் மூலம் உத்த ரவை பெற்று, முஸ்லிம் மக்களை அப்பகு தியில் இருந்து வெளியேற்ற ஆளும் பாஜக அரசு துடித்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலை யில், கடந்த வாரம் (பிப்.9) பன்பூல்புரா வில் உள்ள மதரஸா மற்றும் மசூதியை இடித்து வன்முறையை கிளப்பியது பாஜக அரசு. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர். தற்போது ஹல்த்வானியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தர வும், கலவரக்காரர்களை கண்டதும் சுட வும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திங்களன்று பன்பூல் புராவில் உள்ள ரயில்வே ஆக்கிரமிப்பு நிலத்தில் பிரம்மாண்ட காவல்நிலையம் கட்டப்படும் என மாநில பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி வன்முறையை தூண் டும் வகையில் சர்ச்சைக்குறிய அறி விப்பை வெளியிட்டுள்ளார். முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அறிவிப்பால் ஹல்த்வானியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ரம்பன்
3 சகோதரிகள்
தீயில் கருகி பலி
ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட் டத்தில் உள்ள தன்மஸ்தா - தஜ்னி ஹால் கிராமத்தில் உள்ள மூன்று அடுக்கு கொண்ட ஒரு வீட்டில் திங்களன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. பெரும் பாலானோர் வெளியேறிய நிலையில், 3-ஆவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த பிஸ்மா (18), சைகா (14) மற்றும் சானியா (11) ஆகிய 3 பேரும் என்ன நடக்கிறது என்று அறிவதற்குள், தீ வீடு முழுவதும் பரவியதால் அவர்களால் வெளியேற முடியவில்லை. இதனால் உடன்பிறந்த சகோதரிகளான 3 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.