பெங்களூரு, நவ.10- கர்நாடகாவில் கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடு பட்ட வழக்கில் சர்வதேச சூதாட்ட தரகர் பெங்களூரு வில் கைது செய்யப்பட்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் போன்று கர்நாட காவில் கே.பி.எல். எனப்படும் கர்நாடக பிரிமீயர் லீக் போட்டி கள் நடத்தப்பட்டு வருகின் றன. இந்த போட்டிகளில் சூதாட்ட புகார் எழுந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். சூதாட்டம் தொடர் பாக பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அஷ்பாக் தாராவை போலீ சார் கைது செய்தனர். மேலும் 30-க்கும் அதிகமான கிரிக் கெட் விளையாட்டு வீரர்களி டம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக சூதாட்ட தர கரான பாவேஷ் பக்னா என்ப வரை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சயாம் என்ற சூதாட்ட தரகரை போலீசார் தேடிவந்த னர். இவர்கள் பல்லாரி ‘டஸ்கர்ஸ்‘ அணியின் பந்து வீச்சாளர்களை தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடு படும்படி வலியுறுத்தியுள்ள னர் என தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கைது நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த சூதாட்டத் தில் ஹவாலா முறையில் பணம் கைமாறியதாக கூறப் படுகிறது. சூதாட்டமானது சர்வதேச அளவில் நடந்துள் ளதும் பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச சூதாட்ட தரகரான சயாம் மீது போலீசார் லுக் அவுட் நோட் டீஸ் பிறப்பித்து, தொடர்ந்து அவரை தேடி வந்தனர். இத னிடையே, கர்நாடகாவின் கிரி க்கெட் போட்டிகளில் சூதாட்டத் தில் ஈடுபட்ட வழக்கில் சயாம் கைது செய்யப்பட்டுள்ளார்.