india

இந்திய மாணவர் கனடாவில் சுட்டுக்கொலை  

புதுதில்லி, ஏப்.10- இந்திய மாணவர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.  உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் என்ற மாணவர், கனடா நாட்டின் டொரண்டோ வில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் தான் இவர் படிக்கச் சென்றுள்ளார். உணவகத்தில் பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சுரங்க ரயில் நிலைய பகுதியில் சென்று கொண்டிருந்த இவரை, அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அவரது உடலை எடுத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக, கனடாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது