சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் விஷால்காட் கோட்டைக்கு அருகே காஜாபூரில் முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் மீது இந்துத்துவா கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த வகுப்புவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தாக்குதல் நடத்திய இந்துத்துவா குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோலாப்பூரில் “இந்தியா” கூட்டணிக் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி, சிபிஎம் மகாராஷ்டிர மாநிலச் செயலர் உதய் நர்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திலீப் பவார், காங்கிரஸ் சார்பில் பாரதி பவார், தேசியவாத காங்கிரஸ் (சரத்) சார்பில் ஆர்.கே.பவார், சிவசேனா (உத்தவ்) விஜய் தேவ்னே உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.