india

img

கோவிட்-19: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,088 பேர் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையிலும், நோய் தொற்றின் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,088 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. 3,583 பேர் மரணமடைந்துள்ளனர். 48,534 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 1,454 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 13,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 94 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 12,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 773 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில் 11,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

;