india

img

கோவிட்-19: இந்தியாவில் 1.98 லட்சம் பேர் பாதிப்பு

இந்தியாவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63,71,661 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,77,552 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,04,925 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 95,527 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 70,013 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,362 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 23,495 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 184 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 20,834 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 17,200 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1063 பேர் உயிரிழந்துள்ளனர்.  
 

;