india

img

கோவிட்-19: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்வு

இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, 4வது முறையாக மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையிலும், நோய் தொற்றின் பரவல் அதிகமாகவே காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 194 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், தில்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 56,948 பேருக்கும், தமிழகத்தில் 18,545 பேருக்கும், தில்லியில் 15,257 பேருக்கும், குஜராத்தில் 15,195 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

;