india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெள்ளியன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை “இந்தியா” கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்தனர். சந்திப்பின் பொழுது தேர்தல் ஆணையரிடம் அளித்த கடிதத்தில்,”மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழு மையாக வழங்க  வேண்டும். தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதத்துடன் வாக்களித்தவர்க ளின் எண்ணிக்கையையும் வெளியிட வேண்டும். வாக்குப்பதிவின் முழு விவரங்களை அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும்” என “இந்தியா” கூட்டணி தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர். 

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான 5  வழக்குகளில் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. 

இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ் தான் குறித்து விவாதிக்க வேண்டியது ஏன் என பாஜகவிற்கு காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெறும் நாளான மே 13 வரை ஆந்திர அரசு பணப் பரிவர்த்தனை ஏதும் மேற்கொள்ளக் கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

“கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி” என ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதை நான் வரவேற்கிறேன் ஜனநாயகத்தை பின்பற்றுவதில் இந்தியா உறுதியாக உள்ளது” என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

“அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையைப் பேசுகிறார் ; அது பாஜகவுக்கு பிடிக்காது. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து இருப்பது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக நீதியும் நிவாரண மும் பெறுவது மாற்றத்தின் மிகப்பெரிய அறிகுறி யாகும். நமது அரசியலமைப்பையும் ஜனநாய கத்தையும் பாதுகாப்போம்” என சிவசேனா (உத்தவ்)  தலைவர் ஆதித்ய தாக்கரே கூறினார்.

அகமதாபாத்
10 லட்சம் கொடுத்தால்  நீட் “பாஸ்” 
பாஜக ஆளும் குஜராத்தில் சம்பவம்

நீட் தேர்வு தொடர்பான முறைகேடு சம்பவங்கள் பாஜக ஆளும் மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களி லேயே நிகழ்ந்துள்ளன. குஜராத் மாநிலம் ஜலாராம் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்துவரும் துஷார் பட், தான் நீட் தேர்வு மையத்தின் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய மையத்தில் 16 மாணவர்களிடம் ரூ.10 லட்சம் கொடுத்தால் தேர்ச்சிபெற வைக்கிறேன் என கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, துஷார் பட்டின் செல்போனை போலீசார் பரிசோதித்த போது 6 தேர்வாளர்களின் பெயர்கள், ரோல் நம்பர், தேர்வு மையம் ஆகிய தக வல்கள் அடங்கிய பட்டியல் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை பரசுராம் ராய் என்ற அரசு அதிகாரிக்கு துஷார் பட் அனுப்பியுள்ளார். 

இந்நிலையில்,  துஷார் பட்டின் செல்போனில் இருந்த 6 மாணவர்களி டம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணை முடிவில் மாணவர் ஒருவர் துஷார் பட் பேச்சை நம்பி முன்பணமாக ரூ.7 லட்சத்தை கொடுத்துள்ளது தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக துஷார் பட் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடை பெற்று வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.

புனே 
தபோல்கர் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்தண்டனை

சமூக செயற்பாட்டாளரும், மகா ராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்பு குழு தலைவருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013 ஆகஸ்ட் 20 அன்று புனேவில் சுட்டுக் கொல்லப் பட்டார். தபோல்கர் கொலை வழக்கை முதலில் புனே போலீசார் விசாரித்தனர். புனே காவல்துறை மந்தமாக விசாரணை மேற்கொண்டதால் 2014இல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம். 2 ஆண்டுகளுக்கு பிறகு தீவிர இந்துத்துவா வலதுசாரி அமைப் பான “சனாதன் சன்ஸ்தா” அமைப்பின் நிர்வாகியான மருத்துவர் வீரேந்திரசிங் தவாடே, சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ கர்,  சஞ்சீவ் புனாலேகர், விக்ரம் பாவே  ஆகிய 5 பேரை 2016 ஜூன் மாதம் சிபிஐ  கைது செய்தது.

இந்நிலையில்,  கடந்த 8 ஆண்டுகளாக தபோல்கர் கொலை வழக்கை விசா ரித்து வந்த புனேவில் உள்ள சிறப்பு நீதி மன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கி யது. சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி பிபி ஜாதவ்  அளித்த தீர்ப்பில்,“சச்சின் அன்டுரே, ஷரத் கலாஸ்கர் மீதான கொலை, சதி குற்றச் சாட்டுகள் அரசுத் தரப்பால் நிரூபிக்கப் பட்டுள்ளதால், ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. வீரேந்திர சிங் தவாடே, சஞ்சீவ் புனா லேகர், விக்ரம் பாவே ஆகியோர் மீதான  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லாததால் அவர்களை நீதிமன்றம் விடுவிக்கிறது” என கூறப்பட்டுள்ளது.

சண்டிகர்
பாஜகவுடனான நட்பின் விளைவு
சுக்கு நூறாக நொறுங்குகிறது ஜேஜேபி கட்சி

ஹரியானா மாநிலத்தின் முக்கிய பிராந்திய கட்சியான ஜன நாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) பாஜகவின் நெருங்கிய கூட்டாளி ஆகும். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளை வென்ற ஜேஜேபி பாஜகவுடன் கூட்டணி அமை த்து, அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவு தாலா துணை முதல்வராக பொறுப்பேற் றார். 18ஆவது  மக்களவை தேர்தலுக் கான தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை காரணமாக ஜேஜேபி, பாஜக விற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் ஹரியானாவில் ஆட்சி கவிழ்ந்த நிலையில், சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் அமைத்த ஆட்சி தற்போது கவிழும் நிலையில் உள்ளது. 

ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்ப தாக கூறி தற்போது காங்கிரஸ் கட்சியுடன் ஜேஜேபி  கைகோர்க்க முயற்சி செய்து வருகிறது.  ஆனாலும் காங்கிரஸ் கட்சி ஜேஜேபி கட்சியுடனான கூட்டணி தொ டர்பாக இதுவரை எவ்வித கருத்தும் தெரி விக்கவில்லை. மேலும் ஹரியானாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்த காங்கிரஸ் அம்மாநில ஆளுநரை வலி யுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பாஜகவுடனான நட்பின் விளைவாக ஜேஜேபி, சுக்கு நூறாக நொறுங்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது. துஷ்யந்த் சவுதாலாவின் குடும்பம் ஜேஜேபியை ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றியுள்ளது எனக் கூறி, ஜேஜேபி எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். மொத்த முள்ள 10 எம்எல்ஏக்களில் 4 எம்எல்ஏக் கள் பாஜக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 2 எம்எல் ஏக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். மீதமுள்ள 4 எம்எல்ஏக்களில் 2 பேர் கட்சிக்கு தொடர்பில்லாமல் உள்ளனர். துஷ்யந்த் சவுதாலாவும் சில மூத்த தலைவ ர்களும் மட்டுமே கட்சியில் உள்ளனர். இதுபோக மூத்த தலைவர்கள் பலர் காங்கி ரஸ் கட்சிக்கு ஆதரவாக களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.