india

img

வரலாற்று அறிஞர் ஏ.ஜி.நூரனி காலமானார்

புதுதில்லி, ஆக. 29- இந்திய வரலாற்று அறிஞரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஜி.நூரனி  வியாழனன்று தனது 94 ஆம் வயதில் காலமானார்.

அப்துல் கஃபூர் அப்துல் மஜீத்  நூரனி என்ற இயற்பெயர் கொண்ட அவர், 1930 ஆம் ஆண்டு  மும்பையில் பிறந்தார்.   1953 ஆம் ஆண்டு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வழக்கறிஞராக இருந்து கொண்டே  சட்டம், அரசியல் மற்றும் வரலாற்று தலைப்புகளில் தொடர்ந்து எழுதி சமூகத்திற்கான பங்களிப்பை செய்து வந்தார். 

பத்திரிகையாளர், எழுத்தாளர், என பன்முகத் தன்மை கொண்ட நூரனி  ஒரு எழுத்தாளராக,  இந்திய அரசிய லமைப்பு சட்டம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றை குறித்து  பல புத்தகங்களை எழுதியுள்ளார். தி காஷ்மீர் கேள்வி, அரசியலமைப்பு கேள்விகள் மற்றும் குடிமக்கள் உரிமைகள்,  ஆர்எஸ்எஸ்: இந்தியா வுக்கு ஒரு அச்சுறுத்தல், சாவர்க்கரும் இந்துத்துவமும்  ஆகிய புத்தகங்கள் அவரது சிறந்த படைப்புகளாக உள்ளன.

மேலும் இந்திய முஸ்லிம்களின் பிரச்சனைகளை குறித்து ஆழமான ஆய்வுகளுடன் விரிவாக எழுதியவர்.