பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகராகவும், யூனியன் பிரதேச மாகவும் விளங்கும் சண்டிகர் மாநக ரத்தின் மேயர், துணை மேயர் பதவி களுக்கான வாக்கு எண்ணிக்கை நீதி மன்ற உத்தரவின்படி செவ்வாயன்று (ஜன 30) நடைபெற்றது. மொத்தமுள்ள 36 வாக்குகளில் “இந்தியா” கூட்டணி யின் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு 20 வாக்குகள் இருந்த நிலையில், பாஜக விற்கு 12 வாக்குகள் மட்டுமே இருந்தது. ஆனால் “இந்தியா” கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாகவும், பாஜக வின் மனோஜ் சோங்கரை மேயராக அறி வித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரி சர்ச் சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் அதிகாரியின் இந்த முடிவு முறை கேடானது என காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டம் நடத்தின.
பேனாவால் வாக்குகளை நீக்கிய அதிகாரி
வாக்கு எண்ணிக்கைக்கு முன் தேர்தல் நடத்தும் அதிகாரி, தனது பேனா மூலம் “இந்தியா” கூட்டணியின் 8 வாக்குகளை நீக்கும் வீடியோவை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், இதனையடுத்து “இந்தியா” கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி பஞ்சாப் - ஹரி யானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ர்ந்தது. இந்த வழக்கை அவசர வழக் காக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கள், “சண்டிகர் மேயர் தேர்தல் தொடர் பாக யூனியன் பிரதேச நிர்வாகம், காவல் துறை, மேயர் மற்றும் தேர்தல் பொறுப்பா ளர் விளக்கம் அளிக்க வேண்டும்” என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.