india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

லக்னோ
வடமாநிலங்களைமிரட்டும் கனமழை
உ.பி.யில் மின்னல் தாக்கி 38 பேர் பலி
இமாச்சலில் 22 பேர் பலி

கோடை வெயில் குறைந்து வட  மற்றும் வடகிழக்கு மாநி லங்களில் கனமழை புரட்டி  எடுத்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்க ளில் ஒன்றான அசாமில் அதீத  கனமழையால் 84 பேர் உயிரிழந்தனர். அங்கு 24 லட்சம் மக்கள் முற்றிலும் இயல்பு  வாழ்க்கையை இழந்துள்ளனர். அசாமை போல பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்  தான், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட்  உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை தீவிர மடைந்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநி லத்தில் இடைவிடாமல் கனமழை  கொட் டித்தீர்த்து வருகிறது. மாநிலத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 633 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலம் முழுவதும் மின்னல் தாக்கியதில் ஒரே  நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதேபோல  இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் மற்  றும் நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலியாகி  உள்ளனர்.

அமராவதி
ஆந்திராவில் 8 வயது சிறுமிக்கு கும்பல் வன்கொடுமை
13 வயது சிறார்களால் கொலைசெய்யப்பட்ட கொடூரம்

பாஜக கூட்டணி ஆளும் ஆந்தி ரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ளது முச்சு மரி கிராமம். இந்த கிராமத்தில் ஞாயி றன்று பூங்காவிற்கு விளையாடச் சென்ற 8 வயது சிறுமியை காணவில்லை என,  சிறுமியின் பெற்றோர்கள் காவல்நிலை யத்தில் புகார் அளித்தனர். கடந்த 3 நாட்க ளாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டை  நடத்தியும், காணாமல் போன சிறுமி தொடர் பான எந்த தகவலும் சிக்கவில்லை. கடைசி யாக மோப்ப நாய் சோதனையில் போலீ சார் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் ஈடுபட்ட மோப்ப  நாய் 3 பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்துச் சென்று, அதன்பிறகு ஓடாமல் அங்கேயே நின்றுவிட்டது. இத னால் சந்தேகமடைந்த போலீசார் மோப்ப  நாய் சென்ற வீடுகளில் இருந்த 3 மாண வர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்  டனர். அப்பொழுது, காணாமல் போன 8 வயது சிறுமியை பூங்காவில் இருந்து அழைத்து வந்து கும்பல் வன்கொடுமை செய்ததாகவும், தனது பெற்றோரிடம் சொன்னால் பிரச்சனை ஆகிவிடும் என்ப தால் சிறுமியின் கழுத்தை நெரித்து முச்சு மரி பாசன கால்வாயில் வீசியதாகவும் 3  மாணவர்களும் வாக்குமூலம் அளித்தனர்.  இதைத் தொடர்ந்து 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சிறுமியின் உடல் கிடைக்கவில்லை

மாணவர்கள் கொலை செய்து வீசப் பட்டதாக கூறப்படும் முச்சுமரி பாசன கால்வாயில் கனமழை காரணமாக அள வுக்கதிகமான அளவில் வெள்ள நீர் செல்கி றது. இதனால் மாணவர்கள் அடையாளம்  காட்டிய இடத்தில் சிறுமியின் உடல் சிக்க வில்லை. வெள்ள நீரால் சிறுமியின் உடல்  வெகுதூரம் அடித்துச் செல்லப்பட்டிருக்க லாம் என்பதால் தீயணைப்பு வீரர்களின் மூலம் சடலத்தை தேடும் பணி தொடர்ந்து  நடைபெற்று வருவதாக போலீசார் தக வல்கள் தெரிவித்தனர். 

13 வயது சிறுவர்கள்

8 வயது சிறுமியை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம்  நாடு முழுவதும் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், குற்ற வாளிகளான 3 பேரும் சிறுமியின் பள்ளி யில் படிக்கும் மூத்த மாணவர்கள் ஆவர்.  3ஆம் வகுப்பு படித்த சிறுமியை கொன்ற  மாணவர்கள் 3 பேரும் 14 வயதிற்குட்பட்ட  சிறார்கள் ஆவர். வயது வந்த இளை ஞர்கள் மதுபோதையில் பெண்கள்,  சிறுமிகளை கும்பல் பாலியல் வன்  கொடுமை செய்த சம்பவங்கள் அதி கரித்து வரும் நிலையில் தற்பொழுது  பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மாண வர்கள் கூட சிறுமியை பாலியல் வன்  கொடுமை செய் துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யுள்ளது.

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18-க்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வு முறைகேடு குறித்து  விசாரிக்கக் கோரியும், மறுதேர்வு  நடத்தக் கோரியும் உச்சநீதிமன்றத் தில் 36 வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. இந்த 36 வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில்,”நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என ஒன்றிய அரசு புதனன்று உச்சநீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு வியாழனன்று விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வியாழனன்று நடைபெற்ற விசாரணையின் போது விசார ணையை ஜூலை 18க்கு ஒத்திவைப்ப தாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மும்பை
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் எம்விஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு

மகாராஷ்டிரா மாநில சட்டமன் றத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு  இறுதியில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ், தேசியவாத  காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) கட்சிகள் மகா விகாஸ் அகாதி (எம்விஏ)  என்ற பெயரில் தேர்தலை எதிர்கொள் கின்றன. 

இந்த எம்விஏ கூட்டணியின் தொகுதி  பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம்  2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த  கூட்டத்தின் முடிவில் மகாராஷ்டிராவில்  மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கி ரஸ் கட்சி 120-130 தொகுதிகளிலும், சிவ சேனா (உத்தவ்) 90-100 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத்) 75-80 இடங் களிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.

கொல்கத்தா
பீகார், மேற்குவங்கத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம்
ஆர்எஸ்எஸ் கட்டுரையால் வெடித்தது சர்ச்சை

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் சார்பில் வெளி யாகும் “ஆர்கனைஸர்” என்ற  ஆங்கில இதழில்  வெளியான கட்டுரை யில்,”தேசிய அளவில் மக்கள் தொகை அளவு சீராக இருப்பினும், சில பிராந்தி யங்களில் மக்கள் தொகை அதிகரிக்கி றது. குறிப்பாக அண்டை நாடுகளிலி ருந்து சட்டவிரோத ஊடுருவல்கள் நிகழ்வ தால் பீகார், உத்தரகண்ட், அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இயற்  கைக்கு மாறாக முஸ்லிம்களின் பெருக்கம்  உள்ளது. இது எதிர்காலத்தில் தொகுதி வரையறை மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் மக்கள் தொகை பெருக்கம் என்பது எந்த ஒரு மதம் அல்  லது பிராந்தியத்தை பாதிக்காதபடி இருக்க வேண்டும். ராகுல் காந்தியை போன்ற தலைவர்கள் அவ்வப்போது, இந்துக்களின் உணர்வுகளை அவம திக்கிறார்கள். முஸ்லிம்கள் பெருக் கத்தை வைத்து மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார்” என  அந்தக் கட்டுரையில் சர்ச்சைக்குரிய  வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டுள் ளது. ஆர்எஸ்எஸ் கட்டுரைக்கு நாடு முழு வதும் கண்டனம் குவிந்து வருகிறது.

பாட்னா
நீட் முறைகேட்டின்  முக்கிய குற்றவாளி கைது

நடப்பாண்டு இளநிலை நீட் தேர்வில்  பல்வேறு முறைகேடு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், இந்த  விவகாரத்தை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. நீட் முறைகேடு தொடர்பாக பாஜக ஆளும் மாநிலங்களான  குஜ ராத், உத்தரப்பிரதேசம்,பாட்னா, மகா ராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் 18க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்  பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் ராக்கியை சிபிஐ அதிகாரி கள் வியாழனன்று கைது செய்தனர். பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் பீகார்  மாநிலம் பாட்னாவில் ராக்கியை சிபிஐ  அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்  துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.