india

img

அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  

இந்தியாவின் 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கடுமையான வெயில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது.

இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும்.

தற்போது மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும். இதனால் இந்த 5 மாநிலங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. ஒடிசாவில் தொடர்ந்து 3ஆவது நாளாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இது கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.